பரம் விண்ணுலகம் என்று ஏதேனும் இருக்கிறதா ?
சும்மா அதெல்லாம் கப்சா
இப்ப இருக்கும்போதே அனுபவிச்சு வாழாம எப்பயோ போகப்போற பரலோகத்துக்காக வாழனுமாம்
பாவபுண்ணியம் பார்க்கணுமாம்
செய்யிற செயலுக்கு விணை வந்து சேருமாம்
இன்னொரு பிறவியில வருமாம்
பிள்ளைகுட்டிகளுக்கு வருமாம்
நாம செய்யிறதா நாலுபேருக்கு தெரியாம செய்தா யாருக்கு தெரியும்
திறமையா இருக்கணும் தெரியுமா
போக்கத்த பயலுவ சும்மா சாமி பூதம்னு பேசிட்டு திரியுதுங்க
பெரியார் னு ஒரு சாமி நமக்கு சொல்லிரிச்சுள்ள ஆரிய பார்ப்பன சதின்னு
பகுத்தறிவுன்னு
நாலு காச பாப்பம்
ஜாலியா அனுபவிப்போம்
பக்தியாம் பக்தி
முக்தியாம் அருளாம்
விரதமாம் தவமாம் வரம் வாங்குவாங்களாம்
பசு பதி பாசம் னு சித்தாந்த விளக்கம் சொல்றாங்களாம்
பொழைக்கத்தெரியாத பசங்க பேசிட்டுத்திரியிதுங்க
மனசுக்கு பிடிக்கிற மாதிரி விதவிதமா சாப்பிடனும்
அதுவும் நாலுபேர் சேர்ந்து பெருமை பேசிகிட்டே விருந்து கொண்டாடனும்
நல்ல டிரெஸ் போட்டுக்கிடணும்
மனம் கவரும் பெண்கள் உடன் பேசிமகிழனும்
முடிஞ்சா நறுமண மலர்களை அவர்களுக்கு சூட்டி கொஞ்சனும்
கற்பு நெறி கடைபிடிக்காத பெண்களோடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம்
கைகண்ட பலன்
பூமியில் வாழ்ந்ததற்கு அர்த்தம்
என்ற கொள்கையுள்ள கயவர்களோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை வராமல் இறைவா பார்த்துக்கொள்ளுங்கள்
சேர்க்கை தோஷம் நம்மை பாதித்து விடும்
ஆகவேதான் சத்சங்கம் என்ற ஒரு தொடர்பை இருக்கிற இடத்திலே ஏதாவது ஒரு வகையில் வைத்துகொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னார்கள்
உலகத்தில் கெட்டசங்கம் அரட்டை ஆங்காங்கே இல்லாமல் இருக்காது
அது எவ்வளவு இருந்தாலும் தினந்தோறும் ஒரு கோயிலில் போய் அமர்ந்து கொஞ்ச நேரம் தியானித்து பிரார்த்தித்தால் கெட்டதை நல்லது கழுவி விட்டு விடும்
Kanthar Kotta Manimalai 2
ReplyDelete