இது ஆசு கவி என்னும் சிக்கலான இலக்கண அமைப்பு
இருந்தாலும் பாட ஆரம்பித்து விட்டார் 9 வயது வள்ளலார்
இந்த பிறவியில் அவர் துறவி போல வாழப்போகிறவர்
ஆனாலும் முற்பிறவி அனுபவம் நிறைய இருக்கும் போல
சித்தினி என்கிற உடல்வாகு அமைப்புள்ள பெண்கள் துறுதுறுவென ரசனைக்கு உரியவர்கள்
ஒரு இடத்தில் கால் நிற்காது பாவிக்கொண்டே இருக்கும் . உடல் அசைவுகளும் அடவுகளும் முகபாவனைகளும் நாட்டிய கலைபோல சாதாரணமாகவே இருப்பார்கள்
எனக்கு திருமணமான புதிதில் என் மனைவி அழைச்சுகுட்டை என ஒருவரைப்பற்றி அவ்வப்போது கமண்டுவதை கேட்டிருக்கிறேன்
அப்புறம் ஒருநாள் அதுயார் என கேட்டபோது சொன்னார்கள்
அது சித்தினி உடல்வாகு அமைப்புள்ள ஒருபெண் என்பதையும் அவர்கள் அறியாமலேயே நாட்டியம் ஆடி அடுத்தவரை கவருவதால் என் மனைவி அழைச்சுகுட்டை என்கிற டெக்னிகல் வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்தேன்
இன்றைய அம்மன் படங்கள் சிலைகள் பல இந்த சித்தினி உடல்வாகுவிலேயே இருக்கும்
வள்ளல்பெருமானும் மனிதர்களின் இதயத்தை கவரும் இந்த வடிவமைப்புள்ள பெண் ஒருவரையே இங்கு வர்ணிக்க ஆரம்பிக்கிறார்
ஒரு தேர்ந்த கவிஞன் கவிதை வடிக்கும்போது நேர்த்தி காட்டுவது அவன் கடமை என்பதால் வர்ணனையை கலைஞனின் கண் கொண்டு நாமும் பார்க்க வேண்டும்
சுறு சுறுப்பாக வெட்டி கொண்டிருக்கும் துடுப்பு போன்ற இடை
அன்னம் தத்தி தத்தி பூமியை பிடிப்பதுபோன்ரற நடை
மேகம் கூட்டம் ஒன்று மேல் ஒன்று கவிழ்ந்திருப்பதுபோலவும் விரிந்தும் படர்ந்தும் கோட்டை மதில் போன்ற கூந்தல்
கண்ணாமூச்சி ஆடும் மார்பு
செழுமையான இடுப்பு
நீர்ச்சுழி போன்ற உந்தி
வடிப்பான முழி
பெளர்ணமி போன்ற பளிச்சென்ற முகம்
ஆகியவற்றில் மயங்கி மங்கையர்களின் பிம்பத்தை சுமந்து
அங்கத்தை அளவெடுத்துக்கொண்டே இருக்குமாம் மனம் என்கிற பாவி
அது மாண்டால் மட்டுமே நான் வாழமுடியும்
மங்கையர்களின் பிம்பத்தை சுமந்து
அங்கத்தை அளவெடுத்துக்கொண்டே இருக்கும் மனம் என்கிற பாவி மாளட்டும் நான் வாழட்டும் என்கிறார் வள்ளலார்
பெண்கள் திரிபுரசுந்தரி ஆகிய அன்னையின் பல்வகை அம்சங்கள்
அவர்கள் அழகாக இருப்பது ஆர்களது இயல்பு
பிரச்சினை அவர்களின் அழகில் இல்லை
அந்த அழகியலை ஆண்களின் மனம் பிம்பமாக இதயத்தில் சுமந்து அதை அளவெடுத்துக்கொண்டே இருக்கிறதே அதில்தான் பிரச்சினை இருக்கிறது
பார்க்கிற பெண்களை எல்லாம் அவர்கள் கடந்துபோன பின்பும் இதயத்தில் சுமந்துகொண்டு திரிவதில்தான் பிரச்சினை இருக்கிறது
பெண்களை சுமக்காத மனம் ஆண்கள் அடைய வேண்டிய ஒரு முக்தி
ஒரு படி
பெண்ணாசையை கடந்த முக்தி நிலை இது
ஒழுங்கை கடைபிடி என்பது சரி என்றாலும் வம்பாக ஒழுங்கை கடைபிடிப்பது வளர்ச்சியே அல்ல
பெண்களால் பாதிக்கப்படாத நிலையை நீ அடையவேண்டும் என முருகன் வள்ளலாரிடம் சொன்னாராம்
பெண்களால் பாதிக்கப்படாத படிநிலையை அடையாது ஆசையை அடக்கு என்ற நிலையிலேயே நீ இருப்பதால் முன்னேற்றம் இல்லை என்பதை நீ உணராதிருப்பது என்ன என முருகன் வள்ளலாரிடம் கேட்டாராம்
No comments:
Post a Comment