முருகனை சற்குருவாக அடையப்பெற்றவர்களுக்கு எந்த திக்கில் சென்றாலும் ; அங்கு நல்லதே நடப்பதால் உள்ளம் இன்புறலாமாம்
என் உயிர் இறைவனின் அம்ஸமானது என்று அறிவேன்
அந்த உயிர்க்கு உறுதுணையாக இருக்கும் தேவன் முருகன்
யோகங்களை வாரிவழங்கும் ஞான சற்குரு
துவளாத செல்வத்தையும் வாரிவழங்குவான்
உலக வாழ்வில் போகங்களை அளவோடும் முறையோடும் அனுபவிக்க கற்றுக்கொடுப்பான் ; ஆகையால் ஆனந்த வாழ்வை உறுதிப்படுத்துபவன்
அதனால் ஒவ்வொரு காரியத்திலும் நன்மை எதுவோ அந்த முக்தியை வித்தாக இருந்து அருளுபவன்
முக்தி என்பது நிலை முன்னுறு சாதனம் என்பார் வள்ளலார்
ஒரே நாளில் சித்தி அடைந்துவிட முடியாது
ஒவ்வொரு காரியத்திலும் தனித்தனியாக நன்மை தீமை உணர்ந்து நன்மை தீமை இரண்டையும் கடந்த நிலை ஒரு முக்தி
இப்படி பல முக்திகள் முடிவில்லாதவை
அவைகளை பல பிறவிகளில் கடந்து கடந்து வர ஞான குருகுலத்தின் முதல்வன் அவன்
தேவர்களில் இரண்டு பெரிய பிரிவு நாராயணனை அதிதேவராகவும் சிவனை அதிதேவராகவும் கொண்டு இயங்குகிறது
முருகன் நாராயணனின் மருமகன் ; சிவனின் மகன்
அதனால் சமரச வேதத்தின் அமசமானவன்
பக்தி செய்வோரை மகிழ்ந்து அவர்களை இரண்டு அதிதேவர்களிடத்திலும் பரிதுரைப்பானாம் முருகன்
முருகன் சிவ விஷ்ணு கலப்பானவன்
முருகனும் பல அவதாரங்கள் பூமியில் வந்துகொண்டுதான் இருக்கிறான்
ஐயனார் என்றறியப்படுகிற அய்யப்பன் முதலான பல அவதாரங்கள் முருகனின் அம்ஸமே ஆகும்
அப்படி ஏதாவது ஒரு அவதாரத்தை பற்றிக்கொண்டு பக்தியிலும் பின்பு யோகத்திலும் வளர்ந்தோமானால் ; உலக வாழ்வில் பாவங்களில் வீழ்ந்த பலர் அடுத்த பிறவியில் வறுமையிலும் துன்பங்களிலும் அல்லாடுகிறார்களே ; அப்படி ஆகாமல் நம்மை உயர்த்தி உயர்த்தி விடுவார்
No comments:
Post a Comment