இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 12






நெட்டிலை என்பதை நெட்டிலிங்க மரம் எனவும் கருதலாம்

மரம் கூராக இருக்கும் சடைசடையாக பக்கவாட்டு சிம்புகளும் இலைகளும் அடர்த்தியாக இருக்கும்

ஞானம் முழுஞானம் என்பது ஆழமானது மட்டுமல்ல அகலமாகவும் பல்முகத்தன்மை உடையதாகும்

பக்கவாட்டில் சிம்புகள் இருக்கலாமே தவிர பக்கவாட்டில் வளராமல இறைவனை நோக்கி உச்சியை நோக்கியே வளரவேண்டும்

நெட்டிலிங்க மரத்தில் நுனி உண்ணதத்தை நோக்கி இருக்க அதற்கு ஒர்மையாக பல நூறு விழுதுகள் இருக்கும்

அதைப்போலவே பூமியில் உள்ள எந்த சமயங்களும் குருமார்க்கங்களும் இறைவனை நோக்கியவையே

அடியில் உள்ள விழுதில் ஒரு மார்க்கத்தில் உள்ள மனிதனுக்கு தனக்கு மேலே
உள்ள விழுதில் உள்ள மனிதர்கள் அதே மரத்தில் தங்கியுள்ளவர்கள் என்பது
புரியாது

படிப்படியாக மேலேறி உச்சியை நெருங்கியவற்கு தங்களுக்கு கீழே நாலா புறத்திலிருந்தும் ஏறி வருகிறவர்களை தெரியும்

அவர்கள் நின்று கொண்டு தவிக்கிற இடறல்களும் புரியும்

கீழ்த்தட்டில் உள்ளவர்களுக்கு மேலே இருப்பவர்களும் புரியாது பக்கவாட்டில் உள்ளவர்களையும் தெரியாது

இறைவனை நோக்கிய இந்த மரம் ஏணி

சகல மார்க்கங்களையும் உள்ளடக்கிய குருத்துவங்கள் சற்குருத்துவம்

சற்குரு

பல குருமார்களின் அதிபர் தலைவர்

சகல என்பதே சற் என்பதாகும்

ஆவிமண்டலத்தில் சற்குரு சகல ஞானத்திற்கும் அதிபதி ஆதிசேசனாகும்

அந்த ஆதிசேசன் காரியப்படும்போது செங்கோடன் கார்க்கோடன் என இரண்டு வியாபகம்

செங்கோடன் ஞானசற்குருவாம் முருகன்

அருளுலக வாழ்வுக்கு சற்குரு

கார்க்கோடன் உலக வாழ்வுக்கு சற்குரு

விநாயகர்

ரெண்டு குட்டு குட்டி அப்பம் பொறி ஆட்டபாட்டம்

உலக வாழ்விற்கான உத்வேகம்

பரப்பிரமம் என்றவுடன் ஒன்று ஒரு நபர் என்பதைப்போல ஒரு படிமம் பலரை ஏமாற்றுகிறது

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து

பல தேவர்களாக விரிந்து காரியப்பட்டுக்கொண்டுள்ளது

33 கோடி தேவர்களை அடக்கிய பரமண்டலம்

33 அதிதேவர்கள்

இறைபேரரசில் அவரவர் வேலையை கணகச்சிதமாக செய்து இயங்கிக்கொண்டுள்ளது

இந்த அனைத்திற்கும் தலைவரான ஒரே நபர் போன்றவர் இறைவன் அருட்பெருஞ்ஜோதி

அல் என அரபு பாஸையிலும் எல் என யூதபாஸையிலும் அழைக்கப்படுபவர் தமிழில் இறைவன் என்ற பொதுவார்த்தையாகும்

நாம் உருவமாக வடிவமாக அறிந்தவர்கள் அனைவரும் தேவர்கள்

இந்த அல் அல்லது பிரம்மம் என சொல்லப்படும் படைப்புக்கும் வெளியே வெட்டவெளியாகவும் நிற்பவர்

பிரபஞ்சத்தையும் விட பெரியவர்

அனைத்தையும் நீங்கி நிற்பாய் என்கிறது அபிராமி அந்தாதி

பிரம்மம் என்றவுடன் இறைவன் என்பதாக சிலர் தவறான படிமானத்தில் உள்ளனர்

பிரமம் என்பது படைக்கப்பட்டது

பரமாத்மா பிரபஞ்சம் பரப்பிரமம் மூன்றும் ஒன்றே

நபராக சொன்னால் நாராயணன் அதிதேவர் ஆர்க் ஏஞ்சல் காப்ரியேல்

இறைவனுக்கு அடுத்தவர் ஆனால் இறைவனல்ல

ஆனால் படைப்புகள் அனைத்திற்கும் தலைவர்

அவருக்குள் அவர் மூலமாக அவரைக்கொண்டே சகலமும் படைக்கப்பட்டுள்ளது

மூவரும் தேவரும் முத்தரும் அறியா அருட்பெருஞ்ஜொதி என வள்ளல் பெருமான் சொல்கிறாரே அந்த மூவரில் நாராயணன் என்ற பரப்பிரமமும் அடக்கம்

முருகனை உபசாந்த சிவ சிற்பிரமன் சின்னபிரமன் என வள்ளலார் முந்தியபாடலில் சொன்னார்

மூவரும் முத்தரும் சித்தரும் அறியா அருட்பெருஞ்ஜோதி என வள்ளலார் பாடியதை இலக்கிய புகழ்ச்சி வார்த்தையாக புரிந்துகொள்ள வேண்டும்

சிவனுக்கும் நாராயணனுக்கும் பிரம்மாவுக்கும் தெரியாத அருட்பெருஞ்ஜொதி என
பாடிட்டாரு பாடிட்டாரு அதனால அவர்களையெல்லாம் உடைப்பிலே போடு என்பதுபோல
சன்மார்க்க விருட்டான் குஞ்சுகள் கூவித்திரிகின்றன

கவிஞர்களுக்கே உரிய புகழ்ச்சி அணி உயர்த்திபேசும் வார்த்தைகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்

தேரை ஊர் கூடி கொட்டடித்து வடம்பிடித்து இழுத்து நெம்பி தள்ளுவார்கள்

அடுத்த இடத்தில் போய் நின்றுகொள்ளும்

பிறகு மறுநாள் வந்து அதே மாதிரி நகட்டிவிட்டால் அடுத்த இடத்தில் போய் நின்றுகொள்ளும்

அதுபோலத்தான் ஆன்மீக வாழ்வும்

ஒரு மாயை அறியாமையை விட்டு நகட்டி விட்டால் அடுத்ததில் போய் சிக்கிக்கொள்ளும்

கடைசி நிமிஸம் வரை மாயை இருக்கும்

நாமனைவரும் இப்படித்தான் என ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்

யார் எது சொன்னாலும் அதில் கொஞ்சமாவது உண்மை இருக்கும்

என ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் மனநிலையை வருந்தி கற்றுக்கொள்ள வேண்டும்

நமது அனுபவத்தில் நின்று கொண்டு அடுத்த கருத்தை ஊகூம் ஊகூம் என எதிர்த்துக்கொணடே இருப்பது நமது மனதின் இயல்பு

வள்ளாரின் கடைசி கட்டளை

ஆண்டவர் வரும்வரை விசாரம் செய்துகொண்டிருங்கள் என்பதாகும்

விசாரம் ஆரோக்யமான தர்க்கம்

எதிலும் உண்மையிருக்கிறது

எதிலும் பொய்யும் கலந்து வருகிறது

ஆகவே எந்த கருத்தோடும் அதிலும் என்ன உண்மை இருக்கிறது என மாற்று மார்க்க கருத்துகளை உரசிப்பார்க்க வேண்டும்

ஒரு ஞானி பூமியில் இருக்கும்போது எதிர்க்கிற அசுர சக்திகள் அவர்
சென்றுபோனதும் அவரை துதிபாடுகிற சீடர்களோடு நல்லிணக்கமாகி விடுகின்றன

அவரைப்போல உண்டுமா என செம்படித்து அவரின் வார்த்தைகளுக்கு மெல்ல தவறான அர்த்தம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றன

எதிர்ப்பதை விட கூட இருந்து கலப்படம் செய்வது வெற்றிகரமானது என்ற உபயத்தை அசுர சக்திகள் வாடிக்கையாக செய்கின்றன
வள்ளல்பெருமானின் வெற்றியின் ரகசியம் பக்தியோகியாக அருட்பெருஞ்ஜோதி இறைவனை பற்றிக்கொண்டிருந்ததுவே.

இன்று சன்மார்க்கத்தில் வளர்ந்து வருகிற ஆபத்து இறைவனை உணர்வற்றவராக சித்தரிப்பது

வள்ளல்பெருமானோ உணர்ச்சியுள்ள ஜீவனுள்ள இறைவனோடு உறவாடியவர்


No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...