சுண்டைக்காயை உப்பிட்டு பாண்டத்தில் வைத்திருப்பார்கள் ; சிலநாட்கள் கெடாமல் இருக்கும்
சிலநாட்கள் பண்டம் கெடாமல் உப்பிட்டு பாதுகாக்க இயலும் ; ஆனாலும் நிரந்தரமல்ல
அதுபோன்றதே மனித உடலும் . உப்பிட்ட பாண்டம் போல சிலநாட்கள் பாதுகாப்பாக இருக்கிறது . அதில் நவதுவாரங்கள் உள்ளன . அவைகள் வழியாக கழிவுகள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன ; ஆனால் அவைகளை மறைத்து ஒப்பனை செய்து சமாளித்து வருகிறோம்
கொஞ்சம் வியாதி வந்தால் கழிவுகள் நாற்றமெடுக்க தொடங்கிவிடும்
ஊத்தைச்சடலமடி ஒன்பது துவாரமடி என்ற சித்தர் பாடலை எல்லா மனிதர்களும் அறிவார்கள்
ஆனாலும் அதை நிலவென்றும் ; அருவி என்றும் மயிலென்றும் ; குயிலென்றும் ; தேனென்றும் மானென்றும் வர்ணித்து திரிவார்கள்
ஆனால் ஞானியரோ வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும் கண்டுகொள்வர்
ஆனாலும் சாதாரண மனிதர்போல வள்ளல்பெருமானும் இந்த உடலை நம்பும் ஆசை எனக்கு போகவில்லையே ; அதை மகிமை என்பதாக அலட்டித்திரிவது எனக்கு போகவில்லையே என புலம்புகிறார்
No comments:
Post a Comment