இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 17







சுண்டைக்காயை உப்பிட்டு பாண்டத்தில் வைத்திருப்பார்கள் ; சிலநாட்கள் கெடாமல் இருக்கும்

சிலநாட்கள் பண்டம் கெடாமல் உப்பிட்டு பாதுகாக்க இயலும் ; ஆனாலும் நிரந்தரமல்ல

அதுபோன்றதே மனித உடலும் . உப்பிட்ட பாண்டம் போல சிலநாட்கள் பாதுகாப்பாக இருக்கிறது . அதில் நவதுவாரங்கள் உள்ளன . அவைகள் வழியாக கழிவுகள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன ; ஆனால் அவைகளை மறைத்து ஒப்பனை செய்து சமாளித்து வருகிறோம்

கொஞ்சம் வியாதி வந்தால் கழிவுகள் நாற்றமெடுக்க தொடங்கிவிடும்

ஊத்தைச்சடலமடி ஒன்பது துவாரமடி என்ற சித்தர் பாடலை எல்லா மனிதர்களும் அறிவார்கள்

ஆனாலும் அதை நிலவென்றும் ; அருவி என்றும் மயிலென்றும் ; குயிலென்றும் ; தேனென்றும் மானென்றும் வர்ணித்து திரிவார்கள்

ஆனால் ஞானியரோ வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும் கண்டுகொள்வர்

ஆனாலும் சாதாரண மனிதர்போல வள்ளல்பெருமானும் இந்த உடலை நம்பும் ஆசை எனக்கு போகவில்லையே ; அதை மகிமை என்பதாக அலட்டித்திரிவது எனக்கு போகவில்லையே என புலம்புகிறார்



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...