இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 16






பாடுபட்டு தேடிய பணத்தை பூமியில் புதைக்கும் பாவிகாள்
கூடு விட்டு ஆவிதான் போனபின் கூட வருமோ

என சித்தர்பெருமக்கள் எச்சரித்தபடி அளவுக்கு அதிகமாக சேர்க்கும் பணம் முன்பு காலத்தில் பூமியில் புதைத்துக்கொண்டிருந்தார்கள்

இக்காலத்திலோ அது சுவிஸ் வங்கியில் அடக்கமாகி பேபரில் இவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்துக்கொள்கிறார்கள் . அதற்கு வட்டியும் கட்டுகிறார்கள்

தேவைக்கு அதிகமான பணம் சடமாகிப்போன ஒன்று

அது சேர்த்தவனுக்கு எந்த பலனும் கொடுக்காது

அந்த பணத்தை சேர்த்து சேர்த்து கண்ட தோஷம் - பணப்பித்து இன்னும் இன்னும் சம்பாதி என மன சஞ்சலத்தை மட்டுமே கொடுக்கும்

ஆரம்பத்தில் அந்த பணம் தன்னைத்தானே பெருக்கிகொள்வது போல இருக்கும்

ஆனால் வேதங்கள் அனைத்தும் பணத்தை வைத்து பணத்தை மட்டும் பெருக்குவது பாவம் என்றே சொல்கின்றன

வட்டி மாபெரும் பாவம்

பணத்தை ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்து உற்பத்தி செய்வதோ ; பொருட்களை கொள்முதல் செய்து வணிகம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது

ஆனால் வட்டி அனுமதிக்கப்படவில்லை

வட்டி கொடுத்து பணத்தை வாங்குவதும் அவ்வளவு எளிதான காரியமில்லை

வட்டிக்கு வாங்கியோர் பாடும் அடைப்பது அவ்வளவு எளிதானதல்ல

கெடுபிடிகளும் நோவுகளும் மாறி மாறி சாபத்தை உண்டாக்கி சேர்த்த பணத்தை தொலைப்பதை தவிர வேறொன்றும் அறியாத பிள்ளைகள் வந்து பிறப்பார்கள்

நாலைந்து தலைமுறையாக சேர்த்த பணத்தை ஒரே ஒரு வாரீசு தொலைத்துவிட்டு மண்டையை போடும்

பணம் வெளியேற தொடங்கியவுடன் ஒடுவதற்கென்றே பித்து பிடித்திருப்பது போல அந்தப்பணம் ஓடுமாம்

பணம் பத்தும் செய்யும் என்பதுபோல கபட நாடகம் போடும் ; விசமாகிப்போகும் ; வேலையை ஒழுங்காக செய்யவிடாது ; ஆங்காரத்தை கொடுக்கும் ; ஒழுங்காக இருக்க விடாது

இதை பணத்தாசை பிடிக்காதிருக்க அருளுவாயாக ; தேவைகள் சந்திக்கப்பட்டால் போதும் என பிரார்த்தனை செய்துகொண்டே ஓடிக்கொண்டிருக்க வேண்டும்

இல்லை என்று வருந்தாதபடி இறைவன் அருள்செய்வாரே தவிர அருளாளர்களுக்கு அளவுக்கு அதிகமாக இறைவன் கொடுப்பதில்லை

ஆனால் வறுமையில் உழலவும் விடுவதில்லை




No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...