இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 6






பஞ்சமாபாதகம் என்று கேள்விப்பட்டிருப்போம் . ஆனால் வள்ளலோ ஏழு - சப்தபாதகம் என்கிறார் .

காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ; இவைகளுடன் கொலை ஆகிய ஏழு பாதகங்கள் மற்றும் இவைகளோடு கூடிய அநேக தீய இயல்புகள் எனைப்பற்றிடாமல் சற்குரு முருகன் காத்துக்கொள்ளவேண்டுமாம் .

காமம் நமது உள் பகைவன் . கூடவே இருந்து அவ்வப்போது தலைகாட்டி கழுத்தை அறுப்பவன்

கோபமோ வெங்கொடியவன் . சட்டென்று கோபம் வந்து ஆட்டம் ஆடிவிடுவோம் . பிறகுபார்த்தால் நாம் கோபப்பட்டது தவறு என தெரியும்

பேராசை அளவுக்கதிகமாக அவதிப்படுவது - முழு மூடத்தனம்

இறைவன் போதிய அளவு கையைத்திறப்பார் . இல்லை எனது கொடுப்பார் . நம்மை இயலாமையில் இல்லாமையில் தவிக்க விடமாட்டார் என பலமுறை உணர்ந்தாலும் காசு விசயத்தில் கவலை சேர்த்துவைக்கவில்லையோ என நினைப்பது ; சுபசெலவு செய்ய தயங்குவது .

வீணான மோகம் . இனக்கவர்ச்சி என்பது ஒரு சாபம் . நம் ஆத்மா ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ இல்லை

சரீரத்திலோ நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாகவும் மாறி மாறித்தான் பிறந்தும் வருகிறோம்

ஆண் பெண் பேதம் கடரப்படவேண்டியதே தவிர மறு பாலினத்தை எவ்வளவுதான் ரசித்தாலும் ருசித்தாலும் ஒன்றையும் அடையப்போவதில்லை . திருப்தி அடையப்போவதில்லை

மோகம் வீணானது

மதவெறி கண்கெட்ட ஆங்காரம்

உலகம் முழுவதும் உள்ள பலவகை இனங்களும் இறைவனால் படைக்கப்பட்டவையே

உலகம் முழுவதும் இன்று வளர்ந்துள்ள பலவகை இறைநெறிகளும் மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவனிடமிருந்து வந்தவையே என்ற பொதுப்பார்வை கண்கேட்டுப்போனதால் மதவெறி வருகிறது .

நம் மதத்தை வளர்க்கலாமே தவிர அடுத்த மதத்தை துவேசிக்க கூடாது. நம் மத தேவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடி அடுத்த மத தேவர்களை காறித்துப்பினால் நம் மத தேவர்களும் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்

ஏனெனில் தேவர்களுக்குள் பிரிவினை இல்லை

இறைவன் ஏகர் . இறை பேரரசில் உள்ள பலவகையான தேவர்களும் ஒருவர்க்கு ஒருவர் ஒற்றுமையாக ஏகமாகத்தான் உள்ளனர்

பரஸ்பர அன்பு , நல்லிணக்கம் தேவ குணங்களில் ஒன்று
வெறுப்பு பேதம் என்பது அசுர குணம்

ஏகத்தை ; நல்லிணக்கத்தை மறுக்கும் மாச்சர்யம் விழலுக்கு இறைக்கும் நீர் போன்றது

ஜீவகாருண்யம் ; இறக்கம் ; அன்பு என்பதை மிருகங்களை கொல்லாமல் இருப்பது ; சைவ உணவு மட்டும் சாப்பிடுவது என்பதாக மேலோட்டமாக கருதிக்கொள்கிறோம்

எந்த உணவு என்பது சடங்கு . அடையாளம் மட்டுமே

ஆனால் உள்ளார்ந்து இருக்கும் விஷயம் கொல்லாமை

விலங்குகளை கொல்லாமை புலால் உண்ணாமையை விட முக்கியத்துவமான விஷயம் மனிதர்களை கொல்லாமை

மனிதர்களை அவமதிப்பதே இறைவனுக்கு விரோதமான பெரும் பாவம்

மனிதன் ஒருவனே இறைவனின் சாயலில் உள்ளவன்

மனிதனை அவமதித்தால் அவனின் சாயலில் உள்ள இறைவனையும் அவமதிக்கிறோம்

தூய இறைபக்தி இறைவனின் சாயலில் உள்ள மனிதர்களை எக்காரணம் கொண்டும் அவமதிக்காது

மதங்களின் காரணமாக அடுத்த மதத்தினரை கொல்லலாம் ; சுவர்க்கம் கிடைக்கும் ; தர்மயுத்தம் என்பதெல்லாம் இறைவனை உணராத சீடர்கள் விளக்கம் கொடுத்தது

எந்த இறை தூதரும் ; ஞானியும் அடுத்த மதத்தினரை கொன்றால் புண்ணியம் என்று சொல்லவே இல்லை . அப்படிப்பட்டவர்களை வள்ளலால் பெருமான் பாதகன் என்கிறார்

வேறுவேறு தேசத்தில் வந்ததால் மதங்கள் வேற்றுமை உள்ளவையாக உள்ளன

ஆனால் மதங்களின் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமையை உண்டாக்கும் சமரச வேதமும் சமரச வேதாந்தியும் இறைவன் புறத்திலிருந்து வந்த பிறகே கலியுகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்

சத்திய யுகமும் இறைபேரரசும் வரப்போவதை உணர்ந்த இறைபற்றாளர்கள் தங்கள் மதத்தை அழியவிடாமல் காப்பார்களே தவிர மற்ற மதங்களை வெறுக்கமாட்டார்கள்

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே

சேமத்தை அளிக்கும் மா மறைகள் பல உலகம் முழுதும் பகுதி பகுதியாக ஆங்காங்கு வெளியாக்கப்பட்டுள்ளன .வேற்றுமை போல தெரியும் அவை ஏமத்தை ஏக இறை நெறியை மறைமுகமாக . அவைகளின் ஊடாக போதிக்கின்றன . ஏகத்தின் அருட்பதமே ஓம் .

அந்தோ அந்த ஓம் ன் அர்த்தத்தை சிவன் முதலான அனைத்து தேவர்களும் மனிதர்களும் மறந்தல்லவோ போனார்கள் . மலை முனிவன் சிவனுக்கு முருகனல்லோ ஓம் என்ற பதத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்

இன்றைய மனிதர்களும் ஓம் என்பதன் அர்த்தம் அறியாமல் ஏதோதோ பிதற்றுவார் . அல்லது சிவனுக்கு முருகன் உபதேசித்து விட்டார் என்பதை தெரிந்திருப்பதையே ஓம் க்கு அர்த்தம் அறிந்ததுபோல நம்பிக்கொள்வார் .

ஓம் என்ற பதத்தின் அர்த்தம் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதாம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்பதாம்

வானமண்டலத்திலும் பால்வெளியிலும் அனைத்து தேவர்களும் படைப்புகளும் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்று மனதாலும் உணர்வாலும் துதிக்கும் சத்தமே பிரணவ மந்திரமாக சுற்றி சுழன்று வருகிறது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயண்யாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...