கானல்நீர் போல அளவற்ற மாயைகள் நம்மை பிடித்து ஆட்டுவித்துக்கொண்டுள்ளன .ஒரே ஒரு சின்ன விசயத்தை விட்டு வெளியே வர ஒரு பிறவி ஆகிவிடுகிறது . ஆனால் சற்குருநாதர் அறிவித்தால் எல்லா மாயைகளையும் கடந்து விட முடியும்
உண்மை ஒருபோதும் நாம் கண்டு பிடிப்பதல்ல ; சற்குருவால் உணர்த்துவிக்கப்படுவது
வள்ளல்பெருமானும் அளவற்ற விகாரம்உற நின்ற எனக்கு உண்மை அறிவித்த குருவே என்கிறார்
காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய ஒருவன் ஒரு மரத்தை பிடித்து உச்சிக்கு ஏறுகிறான் ; அந்தோ அங்கு ஒதுங்கியிருந்த ஒரு திருடன் கத்தியை காட்டி மிரட்டி அவனின் அணிகளை பிடுங்கிக்கொள்கிறான்
எரிகிற விறகில் இருந்து தப்பி வாணலியில் ஏறி கொதிக்கிற எண்ணெய்க்குள் மரவண்டுகள் விழுவதை பார்த்திருக்கிறோம்
மாயைகள் ; வினைகள் நம்மை பிடித்து வாட்டும்போது மனிதர்கள் இப்படித்தான் தவிப்பார்கள்
கிளிஞ்சளுக்குள் வெள்ளி இருப்பதுபோல பளபளக்கும் . ஆனால் இருக்காது
தங்கமுலாம் பூசப்பட்ட பித்தாளை ஆபரணங்களால் எமாற்றப்படுவதுபோல
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாள்வென்றும் மானம்என்றும்
தற்காலிக உறவுகளையும் உலகத்தையும் கண்டு மயங்கிக்கொண்டு இருக்கிறோம்
இந்த உலகம் என்னை பரத்திற்கான தேடலுக்குள் முன்னேற விடாமல் மயக்கி மயக்கி பின்னோக்கி இழுக்கிறது
ஆனாலும் இறைவனின் கிருபை ; குருமார்களால் அவ்வப்போது உண்மைகள் உணர்த்துவிக்கப்படுகின்றன
அனுபவம் என்ற பாடம் மூலமாகவும் ; இறைவனால் குரு என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்ட நபர்களாலும் ; ஆவிமண்டல குருநாதர்களாலும் ஒவ்வொரு ஆத்மாவும் உயர்த்தப்பட இறைபேரரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் உள்ளது
No comments:
Post a Comment