இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 5






ஞான சற்குரு முருகன் வள்ளலாருக்கு தெளிந்த உணர்வை கொடுத்தாராம் . என்ன தெளிவு ?

வள்ளல்பிரான் சைவமார்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர் . குடும்ப சூழலில் அந்த சித்தாந்தம் அவருக்கு தெரிந்திருக்கும் .

நல்ல குரு ஏற்கனவே வளர்ந்ததை அழித்து விடு ; மார்க்கம் மாறிவிடு ; இனம் மாறி வேறொரு இனத்தினரின் பெயரை வைத்துக்கொள் ; உன் தாத்தன் பூட்டன் பெயரை மறந்து விட்டு யாரென்றே தெரியாத ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு இஸ்மாயில் என யூதர்களின் அரபியர்களின் பெயரை தாத்தன் பூட்டனாக சொல்லு என்றெல்லாம் சொல்லமாட்டார்

இருக்கிற இடத்திலிருந்தே கடவுளை நோக்கி பாதை காட்டி அருளுவார்

சைவமரபிலே பசு பதி பாசம் என்பதை சொல்லித்தந்திருப்பார்கள்

பசுவாகிய மனிதர்களை மனித ஆத்மாக்களை பாசம் என்னும் பிறவிக்கடலில் இருந்து ரட்சித்து கடவுளை காட்டியருளும் குருவாக சிவனை பதியாக பற்றிக்கொள்

உலக பாசத்திலிருந்து சிவகுருவின் மீது பாசத்தை வளர்த்துக்கொண்டால் பாசம் என்னும் பந்தத்திலிருந்து விடுபடுவாய் என்பார்கள்

வள்ளல்பிரானிடம் சிவகுருவாக வந்த முருகன் ; நிலைக்கண்ணாடியில் தன்னை காட்டியருளிய முருகன் பசு பதி பாசத்திலிருந்தே உபதேசத்தை தொடங்கினாராம்

பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசு சுத்த பாவனை ஆகும் கரணம் ஈங்கமாகும்

பதியாகிய சிவபூஜை செய்வதால் மனம் என்னும் பசு சுத்தமாகும் . மனதோடு சேர்ந்து இயங்கும் மனதை கெடுக்கும் ஐம்புலன்கள் ஈங்கமாகும் .

ஞானிகள் பேசுகிற பாஷையால் தமிழ் விளங்கும் . தங்கம் வலிவு இல்லாதது . நகையாக அணியமுடியாது . நகை செய்யவேண்டுமானால் அதில் செம்பை அளவோடு கலக்கவேண்டும் . அப்படி கலந்த தங்கத்தை தங்கநகை ஆபரணம் என்கிறோம் . ஆனால் ஆபரணத்தை ஈங்கம் என்கிறார் வள்ளலார்

தங்கம் செம்பு கலந்தால் ஈங்கம் . இந்த ஈங்கம் வலிமை பெற்று ஆபரணமாக மகிமை அடைகிறது . அதுபோல மனமது செம்மையாகும் போது சுத்த பாவனையும் உடலும் பொன்னைப்போல பிரகாசமடைகிறது . பொழிவடைகிறது

ஆனால் ஆனால் பதியானவரோ அந்த சுத்த பாவனையையும் கடந்தவர் .

மனிதன் முதலில் சுத்த பாவனை அடையவேண்டும் . பிறகோ அந்த பாவனையையும் கடந்து விடவேண்டும்

தீமையிலிருந்து நன்மைக்கு மாறவேண்டும் பிறகோ நன்மை தீமை என்பதையும் கடந்துவிடவேண்டும் இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் . நன்மையையும் கூட ஒரு இருளே .

இறைதூதர்களோ அவதாரங்களோ தீய இயல்புள்ளவர்களை வெறுத்ததோ விலகி நின்றதோ இல்லை . அவர்களிலிருந்து தங்களை மேம்பட்டவர்களாக வித்தியாசப்படுத்தியும் காண்பித்ததில்லை

என்னை பாவிகளின் தோழன் என்கிறார்கள் ; மனம் திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைக்காட்டிலும் மனம் திருந்துகிற ஒரே ஒரு பாவியின் நிமித்தம் பரலோகம் மிகுந்த சந்தோசமடையும் என்றார் சற்குரு இயேசு . தேவ அன்பை ருசி பார்த்தவர்கள் யாரும் தீயவர்களை அருவெறுக்க மாட்டார்கள்

இறைவன் நல்லோர்க்கும் பொல்லோர்க்கும் நடு நிற்பவர்

சுத்த பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதி
சுத்தம் அந்த சுத்தத்தையும் கடந்த நிலை பரிகரித்த நிலை பரிசுத்தம்

நன்மை தீமை என உணர்ந்து நன்மையில் நின்றால் அது சுத்தம் நன்மை தீமையையும் கடந்து விட்டாலோ பரிசுத்தம் மதி பாசம் அற்று அடங்கிய நிலை

மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே

இருமையை கடந்த நிலை வரவு போக்கற்ற நிலை எதனாலும் பாதிப்பில்லாத நிலை கைகூடினால் மெய்ஞானம் விளங்கும்

அது குன்றின் மீது ஒளிரும் விளக்கை போல தனக்கும் சமூகத்திற்கும் பலனளிக்க கூடியது

மத்தேயு 5

1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.


10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
என்பது இயேசுவின் உபதேசமாகும்

முருகன் வள்ளலாருக்கு சைவ சித்தாந்தம் முதல் இயேசுவின் உபதேசம் வரை காட்டுக்கொடுத்தார் என்பதே இங்கு சுட்டப்படுகிறது

No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...