இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 8






ஒருமை என்பது ஒரே என்ற அர்த்தம் உடையது அல்ல

ஒற்றுமை ; வேற்றுமையில் ஒற்றுமையாக அனைத்து மார்க்கங்களும் மதங்களும் அந்த ஒரே இறைவனை நோக்கியே பல பாதைகளில் முன்னேறிக்கொண்டுள்ளன என்ற புரிதல் உள்ள உத்தமர்கள் உறவு வேண்டும்

இதை பெருநெறி என்கிறார் வள்ளல்பெருமான்

காலம்காலமாக அருளாளர்கள் சமூகத்தை இறைவனை நோக்கியே நகர்த்தி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்

இன்றைக்கு நகர்த்தி விட வேண்டிய படியைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும் இந்தப்படி நிரந்தரமானதல்ல என்ற தெளிவு அவர்களுக்கு இருந்தது

தாங்கள் பிறந்த மதத்தில் இருந்தார்கள் ; அடுத்த மதங்களை துவேசிக்காமல் இருந்தார்கள்

போட்டியாக உள்ள மதங்களின் உண்மைகளை கண்டறிந்து அவைகளை தங்கள் மதத்தில் கலந்து செழுமைப்படுத்தியவர்களே தங்கள் மதத்தை வளர்த்திருக்கிறார்கள்

அடுத்த மதங்களை துவேசித்தவர்களாலோ ; அடுத்த மதங்களை அழிக்க நினைத்தவர்களாலோ அவர்களின் மதம் வளர்ந்ததே இல்லை

மத துவேசிகளால் எந்த மதமும் வளர்ந்ததே இல்லை

அடுத்த மதத்தை அழிப்பதால் எந்த பலனும் விளையப்போவதில்லை

அடுத்த மதத்தின் உண்மையை நாம் உறிஞ்சிக்கொண்டால் ; அது நமக்கு தீங்கு செய்ய சக்தி அற்றுப்போய் விடும்

சைவமும் வைணவமும் சமணர்களுடன் போட்டியிட முடியாமல் தோற்றுப்போன காலம் ஒன்று இந்தியாவில் இருந்தது

அரசுகள் அனைத்தும் சமண மதத்தின் ஆழுகையில் இருந்தன

அதில் முதன்முதலாக சைவத்திற்கு புத்தியிர்ப்பை உண்டாக்கியவர் திருநாவுக்கரசர்

அவர் நோய்வாய்ப்பட்டிருந்த வரகுணபாண்டிய மன்னனை குணப்படுத்தியவுடன் சைவ சமயம் அரச மதமாக அறிவிக்கப்படவில்லை

வழக்கம் போல வாதிலே சமணர்களை வெல்லவேண்டி வந்தது

அது தத்துவ வாதாக மட்டுமில்லை ; அக்கால வழக்கப்படி வைகையில் ஏடு விடவேண்டும்

அந்த ஏடு வைகையை எதிர்த்து நீந்த வேண்டும்

திருநாவுக்கரசர் விட்ட ஏடு எதிர்த்திசையில் நீந்தி கரையேறிய இடம் திருவேடகம் . இன்று அங்கு ராமகிருஷ்ண தபோவனம் இருக்கிறது

நான் முக்கியமாக சொல்ல வருவது ; அதற்கு முன்பும் பல சைவர்கள் சைவத்தின் மீதுள்ள அக்கறையால் போட்டி இட்டார்கள் . தோற்றார்கள் ; கழுவேற்றப்பட்டார்கள்

சமணர்களை வெல்ல முடியாத போட்டிகள் பல நடந்தன

இதில் திருநாவுக்கரசர் மட்டும் எப்படி வென்றார் ?

ஒரே ஒரு பதில் ; அதற்கு முன்பு சமணத்துறவியாக தர்மசேனர் என்ற பெயரில் சமண பள்ளிகளில் பல பயிற்சிகள் கற்றவர் திருநாவுக்கரசர் .

சமண மதத்தின் சகல ரகசியங்களையும் கற்றுத்தேறி சைவத்திற்கு மாறிவந்த திருநாவுக்கரசர் சமணத்தை வென்றதன் பின்னணி அதன் உண்மைகள் திருநாவுக்கரசருக்கு அத்துப்படி என்பதாகும்

அப்படியில்லாமல் இன்றைய விருட்டாங்குஞ்சுகளை போல வெறும் வேகம் மட்டும் வைத்துக்கொண்டு சமணத்தை வெறுத்து அழிக்க நினைத்தவர்கள் சமணத்தோடு தோற்று அழிந்துபோனார்கள்

சமணத்தை கரைத்துக்குடித்த திருநாவுக்கரசர் சமணத்தை வென்று சைவத்திற்கு புத்துயிர் கொடுத்தார்

இதுவே இந்து மதம் வளர்ந்து வந்த பாதை

இன்றைய மதரட்சகர்களால் இந்து மதம் ஒரு தம்பிடி கூட வளராது

வள்ளல்பிரான் எதற்காக பூமிக்கு அனுப்பபட்டாரோ ; அது உலகம் முழுவதும் சகல மதங்களையும் சமரசப்படுத்தி சமாதானத்தை நிலைநாட்டும் பணி வள்ளலாரின் சீடர்களுக்கு இருக்கிறது

அந்தப்பெரு நெறி ; சகல மதங்களையும் ஒதுக்கிவிட்டு புது மதத்தை உறபத்தி செய்வதல்ல

சகல மதங்களின் மூலமாக வெளிப்பட்டுள்ள உண்மைகளை உள்ளபடி அங்கீகரித்து பொதுநோக்கு சமரச சமாதானத்தை உறபத்தி செய்வதாகும்

வள்ளலாரின் பின்வரப்போகிறவர் சமரச வேதாந்தி என்பதை அறிக

அவரை வரவேற்று பிரார்த்தனை செய்வது வள்ளலாரின் இதயத்தை உணர்ந்தோரின் பணியாகும்



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...