இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 31





மணிமாலையின் நிறைவுப்பாடல் ; பெரும்பாலும் வெற்றி ; போற்றி என்பது போல கவிஞர்கள் முடிப்பார்கள்

ஆனால் வள்ளல்பெருமானோ தன் அச்சத்தை - கையறு நிலையையே வெளிப்படுத்துகிறார்

நான் கொண்ட விரதம் ; இறைவனையும் இறை சக்திகளையும் ; குருநாதனான முருகனையே எதற்காகவும் சார்ந்திருக்க வேண்டும் என்பது

உணவு ; உடை ;இருப்பிடம் அடிப்படை தேவைகளுக்காக உலகத்தில் பொருள் தேட உழைக்கவும் வேண்டும்

நேரத்தை அதில் செலவிட்டு பிறகு உன்னையும் தேடினால் ரெண்டும் கெட்டானாக இருக்க வேண்டும்

அப்படி இல்லாமல் நீயே என் தேவைகளை சந்தித்து விடுகிறேன் என வாக்கு கொடுத்தீரானால் ; நான் உலகத்தின் பக்கம் போகும் படியாக இருக்காது

இல்லாமை என்ற துட்ட நாய் என் விரதத்தை கவ்விக்கொண்டு போகிற சூழ்நிலையில் தானே உள்ளேன்

என் செய்வேன் என் செய்வேன்

ஆனால் அவருக்கு தணிகைமணி பிரான் என சொல்லிக்கொண்டு அவர் கண்ணுக்கு மட்டுமே தெரிகிற ஒளிதேகி ஒருவர் தரிசனமானார்

அரேபியாவில் பிறந்த முகமது சாலிக் என்ற ஞானி அல்லாஹ் வால் அறிவுறுத்தப்பட்டு திருத்தணியில் குகையில் தவமிருந்து முருகனின் குரு அருளால் ஒளி தேகம் - மரணமில்லா பெரு வாழ்வு பெற்றவர்

அவர் பரமேறும் முன்பு பூமியிலே வாரீசுகளை உருவாக்க இருவரை தேர்ந்தெடுத்தார்

ஒருவர் வள்ளலார் மற்றவர் சாலை ஆண்டவர்

தணிகைமணியார் 9 வயது சிறுவனை வான்வழியாக பல இடங்களுக்கும் அழைத்து சென்று பல பயிற்சிகள் வரங்களை அருளினார்

9 வயதில் பாடிய கந்தர் கோட்ட மணிமாலைதானே அவரது முதல் பாடல் என சீடர்கள் கேட்ட போது ; இல்லை அதற்கு முன்பே திருத்தணி முருகனைப்பற்றி பாடியதுவே என் முதல் பாடல் என்றார் வள்ளலார்

திருத்தணிக்கு வள்ளலாரின் குடும்பத்தினர் யாருமே அவரை அழைத்து செல்லவில்லை . தணிகைமணியாரே வான்வழியாக அழைத்து சென்றவர் இதன் உள் பொருள்

அதுபோலவே சாலையாரையும் 12 ஆண்டுகள் திருப்பரங்குன்றத்திலுள்ள ஒரு குகையில் இருத்தி தணிகையார் பயிற்சி கொடுத்துள்ளார்

இந்த இருவருமே மரணமில்லா பெரு வாழ்வு ; சமரச வேதம் ; சத்திய யுகத்தை வரவேற்க அடித்தளம் இடுதல் ; ஆண்டவர் வருகையை முன்னறிவித்தல் ; ஆட்சிக்கான கொடியை ஸ்தாபித்தல் போன்ற வேலையை தமிழகத்தில் அலுக்கில்லாமல் செய்து வருகிறார்கள்

இவ்விருவருமே தங்கள் தேவைகளுக்கு யாரையும் அண்டியதில்லை

தாங்களே பணத்தை இறைவனிடமிருந்து பெற்று சீடர்களுக்கும் செலவு செய்தார்கள்



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...