இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 11






கடவுளை நீ உனக்குள்ளேயே தேடி கண்டறியவேண்டும் . நானே கடவுள் என்பதை சொல்லப்பழகிக்கொள்வது அவ்வளவு சாதாரண விசயமல்ல எங்கே நானே கடவுள் என சாதாரண மக்களை சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம் ; அவர்களுக்கு தைரியம் வராது

நம்மை நாம் அறிந்துகொண்டால் மட்டுமே கடவுளை நீ உணர முடியும் என சித்தர் பெருமக்கள் காட்டிய உயர்ந்த ஞானத்தை என்னிடம் வந்து சிரத்தையுடன் கற்றுக்கொண்டதால் நீயும் ஞானியாகி விட்டாய்

அதனால் நான் கடவுள் நான் கடவுள் என சொல்லும் தைரியம் உனக்கு வந்திருக்கிறது . இந்தா பிடி சட்டிபிகேட் நீ ஞானியாகி விட்டாய் இப்பிறவிக்கு பிறகு நன்மையையும் இல்லை தீமையும் இல்லை

இருக்கிறவரைக்கும் மகிழ்ச்சியாக இரு . சந்தோசம் சந்தோசம்

அப்படி இருக்க கற்றுக்கொள்வது உன் ஞானத்தில் உள்ளது

எந்த கட்டுப்பாடுகளையும் வைத்துக்கொள்ளாதே

இயற்கையோடு இயற்கையாக பிரம்மத்தோடு பிரம்மமாக இருக்க கற்றுக்கொள் என உசுப்பேத்திய ரஜினீஸ் முதல் இன்றைய பல கார்பரேட் குருமார்களின் வியாபாரம் படித்த நல்ல வேலையிலிருக்கும் இளைஞர்களுக்கு உற்சாகத்தை தருகிறது

சிலர் அதை வரைமுறையற்ற இன்ப நுகர்ச்சிக்கான கதவாக ஆக்கிக்கொண்டார்கள்

இன்னும் சிலர் எதையும் அனுபவி ஆனால் பிறருக்கு தீங்கு இல்லாமல் அளவோடு அனுபவிக்க கற்றுக்கொள்வது நுட்பம்

அறிவை பட்டை தீட்டி உலகிற்கு கேடில்லாமல் மனதை ஒழுங்குபடுத்தி உன் உலக வாழ்வில் முன்னேறலாம் ; குடும்பத்தை முன்னேற்றலாம்

வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என சொல்லிக்கொண்டே திறமையாக வியாபாரம் செய்து முன்னேறலாம் என சொன்னவுடன் கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளுக்கு ரெம்ப சவுகரியமாக ஆகி விட்டது

உனக்கும் உலகிற்கும் தீமையில்லாமல் அகத்தாய்வு மனதை ஒழுங்கு செய்து திறம்பட வாழும் இந்த வாழ்வே போதும்

இந்த உபதேசம் எந்த அடிப்படையிலானது என்றால் இனி இந்த பிறவிக்கு பிறகு நாம் இல்லை ; பிரம்மத்தில் நல்ல பதிவுகளையும் கெட்ட பதிவுகளையும் கலந்து விட்டு இல்லாமல் போய் விடுவோம் ; அதற்காக ஆட்டம் போடு அக்கிரம் செய் சமுதாயத்தை கெடு என சொல்லவில்லை ; நன்மையாக வாழ பழகு

வீணாக போகும் பிரம்மத்தின் நீதி இது

இல்லாமல் போகும் பிரம்மத்தின் நீதி இது

அதாவது அழிவை விரும்பும் பிரம்மத்தின் நீதி இது

பிரம்மம் பிரம்மம் என அந்த அழிவை விரும்பும் பிரம்மத்தின் (அசுரர்களின்) உபதேசத்தை கேட்டு பிரம்மையாகவே போதித்து சாதிப்பர்களாம்

இது புண்மை நெறி என்கிறார் வள்ளல்பெருமான்

வேதாத்திரியம் என்கிறார்களே அது திரிக்கும் நெறி . மேற்போக்காக ஆன்மிகம் போல தெரிந்தாலும் முடிவு என்னவோ நித்தியஜீவனை மறுப்பது . மரணமில்லா பெருவாழ்வு என்ற இலக்கை அறிந்துகொள்ளவிடாமல் அவர்களை சூனியத்தை நோக்கி திருப்பிவிட்ட அசுர உபதேசமாகும் .

வேதாத்திரி ஆரம்பத்தில் ஒரே ஒரு பொய்யை பரப்பினார்

வள்ளலார் ஒரு பவுர்ணமி இரவில் வேதாத்திரியின் கால் பக்கம் வந்து நின்றதாகவும் இனிமேல் உன் மூலமாக நன்றாக கல்லா கட்டுவேன் என சொன்னதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார்

சன்மார்க்கத்தை சேர்ந்த பல அன்பர்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னால் அணிவகுத்து வேதாத்திரியத்தை வளர்த்துவிட்டார்கள்

உன்னதமான ஏக இறைவனின் பேரிலான பக்தி சரணாகதி ; ஆத்தும சரீரத்தை ஒளி சரீரமாக வளர்த்து ஸ்துல சரீரத்தின் அவசியம் இல்லாமல் நித்தியஜீவனை அடைந்து என்றென்றும் உயிர் வாழும் சகாக்கல்வியை போதித்தவரான வள்ளல்பெருமான் எங்கே இனிமேல் இல்லாமல் கரைந்து மறைந்துவிடுவோம் என்று சொன்ன வேதாத்திரி எங்கே

இருவரும் நேர் எதிர்புறமல்லவா ?

வேதாத்திரி சொன்னார் . சாதாரண பொதுமக்கள் இல்லாமல் போய் விடுவார்கள்

ஆனால் யோகக்கலையை கற்றுக்கொண்டு குண்டலினியை ஏற்றியவர்கள் ஜீவசமாதி அடைந்து சாகாமல் இருப்பதுதான் சாகாக்கல்வி

ஜீவசமாதியை வள்ளல்பெருமான் ஆதரித்தது இல்லை

அழிகிற உடலை அழிய விடாமல் காக்கிரதல்ல மரணமில்லா பெருவாழ்வு

ஆத்தும சரீரத்தை ஒளி சரீரமாக மாற்றிக்கொள்வது . தேவராக மாறி பரலோகத்திற்குள் பிரவேசிப்பது மனிதனாக பிறந்ததின் இலக்கு

ஆதியோகிய சிவன் வளர் ஒளி நாதராக தனது ஆத்துமாவில் ஒளியை பெருக்கி முழுமை அடைந்ததை வைரவன் என்றார்கள்

மனித படைப்பு எதற்காக என்றால் நாம் தேவராக மாறி பரலோகத்திற்குள் நுழைய வேண்டும்

அருட்பெருஞ்சோதி இறைவன் ஆதியில் படைத்த 33 கோடி தேவர்களில் ஒரு பெரிய கூட்டம் இறைவனுக்கு விரோதமாக தன் முனைப்பு ஆணவம் அடைந்து அசுரர்களாக மாறிவிட்டனர்

அந்த வெற்றிடத்தை மனிதர்களாக இருந்து ஒளி சரீரம் பெறுவோரின் எண்ணிக்கை நிரப்ப வேண்டும் என்பதற்காகவே பூமியில் மனித படைப்பு அனுமதிக்கப்படுகிறது

அது நிரம்பினால் பூமியில் மனித படைப்பு நிறுத்தப்படும்

இறைவனே பெரியவன் என முன்னிலைப்படுத்துபவர்கள் தேவர்கள்

நாங்களும் இறைநிலையை அடைந்துவிட்டோம் என தங்களைத்தாங்களே பெருமைப்படுத்துபவர்கள் அசுரர்கள்

ஆன்மீகவாதிகளில் இந்த இரண்டு பிரிவுகளும் உள்ளனர்

ஆன்மிகம் என்றவுடன் ஆகா என ஓடி விழுந்துவிட கூடாது

எவ்வளவோ சித்துக்கள் ஆற்றல் இருந்தாலும் ; திரள் திரளாக வந்த மக்களுக்கு நன்மைகள் நடந்தாலும் அதை விளம்பரம் போட்டு காட்டாமல் அருட்பெருஞ்சோதி வழிபாட்டை முன்னிலைப்படுத்தியவர் வள்ளல்பெருமான்

தற்பெருமை பிடித்த மனிதர்களுக்கும் இறைவனை மகிமைப்படுத்து ; அவரை சராணகதி அடைக என்றால் பிடிக்காது

நீயும் கடவுளாகலாம் என்றால் சபாஷ் என்பார்கள்

அந்த மனிதன் கடவுளாகிவிட்டான் ; சித்தராகிவிட்டான் ; ஜீவசமாதி ஆகி அருள்பாலிக்கிறான் என்றால் ஓடி ஓடி விழுந்து கும்பிட்டுக்கொள்வான்
ஆனால் கடவுளை கும்பிடு என்றால் ஒரு பார்வை பார்ப்பான்

நீ அறிந்த ரூபம் ; பெயர் எல்லாவற்றையும் விட உன்னதமானவர் கடவுள் அருட்பெருஞ்ஜோதி

சிவனை நீ நேசிக்கிறாயா

அவரை குருவாக வைத்துக்கொள்

இங்கு முருகனை பாடுமிடத்து வள்ளல்பெருமானின் வார்ணனையை பாருங்கள்

பரிபபூரன அகன்ட சத்துவமான பிரம்மத்தின் உப சாந்தன் முருகன்

சிவனின் சின்ன வடிவம் முருகன்

பிரம்மத்தின் உபசாந்தன் முருகன் என்றால் நம்மைப்போன்ற மனிதர்களின் நிலை என்ன ?

முருகனே உபசாந்தன் என்றால் சாகிற பிரம்மமாகிய மனிதர்கள் நம்மை பிரம்மம் என்று சொல்லலாமா ?


No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...