காக்கைகள் அந்தி அடங்குகிற நேரம் ஒரு பெரிய மரத்தில் கூடி பழமை பேசும் .கரைந்துகொண்டே இருக்கும் . ஒரு காக்கை கரைவதற்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு கூட்டமாக கரைந்துகொண்டே இருக்கும் அதில் ஒரு உப்பும் சப்பும் இல்லை என்பதை வள்ளல்பெருமான் அறிந்திருக்கிறார் .
அதுபோல உப்பும் சப்புமில்லாமல் ஓயாமல் வெட்டி பெருமை புராணம் பாடுவது மனிதர்களின் இயல்புமாகும்
இப்படி வெட்டியாக பேசுவது சாதாரண மனிதர்களை விட கள்ளுண்டவர்களுக்கு மிக மிக அதிகம் ,
சாராயத்தை குடித்து விட்டு கங்குகணக்கில்லாமல் உளறுவதும் ஊத்தை காதம் நாறுவதும் வாய்வலிக்கும் வரை தர்க்கம் செய்வதும் செய்வார்கள் ; சிவனைப்பற்றி தேவர்களைப்பற்றி இறைவனைப்பற்றி பேசினால் வாயை மூடு தொனதொனதென்னாதே என்பார்களாம் ;
ஆனாலும் இப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் உனது புகழ் நான் பேசுவதை காதுகொடுத்து கேட்டு உன்னையும் துதிக்கும் மனது சிலருக்கு இருக்குமே அப்படிப்பட்டவர்களின் உறவு எனக்கு அமையட்டும்
இறை அடியவர்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்தவர்களை ஒதுக்கவே மாட்டார்கள் ; ஏனென்றால் சற்குருநாதன் முருகன் எப்படிப்பட்டவன் என்பது அவர்களுக்கு முன் உதாரணம் .
உயர்ந்த பண்புள்ள தெய்வானையோடு மட்டுமல்ல மிக தாழ்ந்த மடக்குறத்தி வள்ளியொடும் உள்ளார்ந்து இசைவாக சந்தோசமாக வாழும் குணக்குன்று அவனல்லவா ?
No comments:
Post a Comment