வள்ளல் பெருமான் சிவனால் திருவடி தீட்சை வழங்கப்பெற்ற பிறகு சிவ வழிபாட்டில் இருந்து அருட்பெருஞ்சோதி வழிபாட்டுக்கு மாறினார்
அந்த அருட்பெருஞ்சோதி இசுலாத்தில் சொல்லப்படும் அருவ இறைவன் என்பதும் அல்லா என்பதும் வள்ளலாருக்கு நன்கு தெரியும்
ஆனாலும் மதச்சாயம் உண்டாகி கேடுகள் விளையும் என்பதால் அருட்பெருஞ்சோதி என அடையாளப்படுத்தினார்
இசுலாத்தின் மந்திரமான கலிமாவை கொஞ்சம் மாற்றி சன்மார்க்க மந்திரமாக கொடுத்தார்
அவன் அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் என்பது இசுலாத்தின் மந்திரம்
அளவற்ற அருளாளன் என்பதை அருட்பெருஞ்சோதி என்றார்
நிகரற்ற அன்புடையோன் என்பதை தனிப்பெருங்கருணை என்றார்
வள்ளலாரின் இன்னொரு அம்சமான சாலை ஆண்டவரும் பிரணவமே அருட்கலிமாவாகும் என உறுதிபடுத்தியுள்ளார்
அல்லா என்ற அரபு வார்த்தைக்கு அர்த்தம் கடவுள் இறைவன் என்ற பொது அர்த்தமாகும்
அருவ ஏக இறைவனை வழிபடுவது என்ற உண்மையைத்தவிர மற்ற அராபிய கலாச்சார பண்பாடுகளை இசுலாம் மதம் என்பதாக உள்ளது
அதில் அராபிய தன்மையை ஒதுக்கிவைத்துவிட்டு இந்துக்களாக இருந்துகொண்டே அருவ இறைவனை வணங்கலாம் என்பதை இந்திய இசுலாமியர் உணரவேண்டும்
அராபிய அடையாளங்கள் உங்களை அந்நியப்படுத்துகிறது
இந்திய உறவிணர்களைவிட்டு ஏன் ஒதுங்கவேண்டும்
இறைவன் முக்கியமே தவிர அராபிய அடையாளம் அவசியமற்றது
ஏக அருவ இறைவனை வணங்க சரியான மார்க்கம் வள்ளலாரின் சன்மார்க்கமாகும்
9 வயதில் கந்தர்கோட்ட முருகன் கோவிலில் வள்ளலார் நின்றுகொண்டிருக்கும் போது அலங்காரம் செய்யும்வரை யாராவது பாடுங்களேன் என பூசாரி கேட்டதால் 31 பாடல்கள் தன்னையறியாமல் பாடினார்
அருளால் பாடிய இப்பாடல்களில் முந்திய பிறவி ஞானம் உண்மை வெளிப்பட்டுள்ளது
அருவ ஏக இறைவனை வழிபடுவதன்றி அவரது தேவர்களை மட்டும் வழிபடு மதி என்றால் கனவில் கூட மதிக்கமாட்டேன்
அந்த தேவர்கள் ஏன் கண்ணெதிரே வந்து நன்மைகள் பல கொடுக்கிறேன் என்றாலும் அவர்களை மட்டும் மதித்து விட்டு உருவம் அற்ற இறைவனை வழிபடாமல் இரு என்றால் இருக்கமாட்டேன்
No comments:
Post a Comment