இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 18






வாழையடி வாழையாக திருக்கூட்ட மரபில் வந்தவர் வள்ளல்பெருமான்

அதுமட்டுமல்ல அவரே முந்திய பல பிறவிகள் வந்து படிப்படியே வளர்ந்து இந்த உண்ணதமான நிலையை அடைந்தார்

அப்படியானால் முந்திய முந்திய பிறவிகளில் போதிய முழுமை இல்லாமலும் ; கொஞ்சம் மாயைகளை கடரா நிலையிலும் இருந்து போராடித்தான் இந்த முழுமையை அடைந்தார்

கொஞ்சம் மாயைகளோடு அவர் இருந்தார் என்பதற்கு இப்பாடலே சாட்சியாகும்

இது அவர் பாடிய பாடல்தான் என்பதை சன்மார்க்கிகள் யாரும் மறுப்பதற்கில்லை

இந்த பாடலை கொஞ்சம் கவனித்தால் கடும் பற்று என்ற மாயை ; மதம் என்ற மாயை மட்டுமல்ல அதன் தொடர்பாக மாச்சர்யம் என்ற பேத மன நிலை அவருக்கும் இருந்தது என்பதை அறியலாம்

பிற்காலங்களில் ; நான் அந்தளவு சிற்றறிவோடு இருந்தேன் என மனம் திறந்து வள்ளல்பெருமான் வாக்குமூலம் கொடுக்க தயங்கதில்லை

ஆனால் அவரை கடவுளாக ஆக்காமல் விடுவதில்லை என குரு பெருமை பேசித்திரியும் சிலர் இந்த உண்மையை உணரப்போவதில்லை

ஆறு மார்க்கங்களும் ஒவ்வொரு குருகுலமாகும்

அந்தந்த குருமார்க்கங்கள் தேவர்கள் அவரவர் ஆத்மாக்களை கடவுளை நோக்கி படிப்படியே உயர்த்தியே வருகின்றன

ஒரு குறிப்பிட்ட தரத்தை கடந்தபிறகே மற்ற குருகுலங்களை ஒப்புக்கொள்ளும் பொதுநோக்கு உண்டாகும்

அந்த ஒருமைப்பாடு சகல தேவர்களையும் கடந்த அருவ ஏக இறைவனே சகல தேவர்களாகவும் வியாபகம் ஆகி இறைபேரரசை நடத்தி வருகிறார் என்பதை உணர்ந்து ஒரே இறைவனான அருட்பெருஞ்ஜோதியானவருடன் ஒன்றினால் வருவது ஒருமைப்பாடு

இந்த ஒருமைப்பாடு மற்ற தேவர்கள் யாரையும் ஒதுக்காது ; இல்லவே இல்லை என மதம் பிடித்து கத்தாது

வள்ளல்பெருமானாரின் வார்த்தைகளில் சொல்வதானால் தேவரும் முத்தரும் சித்தரும் ஞானியரும் அந்த ஒரே இறைவனின் அருளைப்பெற்றே தம் தம் காரியங்களை செய்துவருகிறார்கள் என்பதாகும்

அந்த நிலையை அடைந்தபிறகே பெருமான் சொன்னார் ; ஆன்மநேய ஒருமைப்பட்டு உரிமையை நான் அடைந்துவிட்டேன் என்று

ஏனெனில் எந்த இறைவனோடு ஒன்றிவிட்டோமோ ; அதே இறைவனின் அருளைப்பெற்று இயங்கிவரும் தேவர்களும் நம்மை வெறுக்கப்போவதில்லை ; நாமும் தேவர்களை அவமதிக்கப்போவதில்லை

அனைவரோடும் அவர்தம் குருகுலங்கலோடும் நல்லினக்கமாகும் அந்த நிலையே ஆன்மநேய ஒருமைப்பாடு

சமரச சத்தியத்தின் அடித்தளம் இது

அதனால்தான் தன்னை மட்டுமே பூன் பிடித்து குருபெருமை பேசித்திரியும் சன்மார்க்கிகளிடம் பெருமான் சொன்னார் ; சமரசம் என்னவென்று இப்போது நான் சொன்னாலும் அதை புரிந்துகொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லை என்று

ஏற்கனவே பூமியில் உள்ள ஆன்மீக இயக்கங்களோடு நேயமாக - சமாதானமாக இருப்பதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும் . இதுவே சமரச சத்தியத்தின் ஜீவனுமாகும்

ஆன்மநேய ஒருமைப்பாட்டை அடைந்தவர்கள் ; தங்கள் மார்க்கமல்லாத அடுத்த தேவர்களை பின்பற்றுகிறவர்களை வெறுக்கமாட்டார்கள்

தங்கள் தேவர்களை பின்பற்றாதவர்களையும் வெறுக்கமாட்டார்கள்

இந்த பாடலிலோ முருகனை வழிபடாத அடுத்த மார்க்கத்தாரை வள்ளல்பெருமான் கடுமையாக அர்ச்சிக்கிறார்

வைணவம் ; சாக்தம் ; கெளமாரம் என நாராயணனை ; அன்னையை ; அருவத்தை வழிபடுகிறவர்கள் முருகனை வழிபடுவதில்லை

ஆனால் அவர்களை பேயர்வாய் ; மூடர்தலை ; சொரிந்தஅழுகண் ; வீணர்செவி என்றெல்லாம் திட்டுகிறார்

மதமாச்சர்யம் என்ற மாயை அவரையும் ஆதியில் ஆட்கொண்டு இருந்தது ; ஆனால் இறைவனைக்குறித்த தாகம் அவரை ஏறாதநிலை நிலைமேல் பிற்காலத்தில் ஏற்றி வைத்தது என்பதை நடுநிலையோடு உணர்வோர் பேறுபெற்றோர்

மனிதர்கள் செய்யும் தவறுகளை ; இயல்புகளை தங்களது சொந்த இயல்பு போல ஏற்றுக்கொண்டு இறைவனிடம் மன்னிப்புகோரி வள்ளல்பெருமான் பாடியபாடல்கள் ஏராளம்

இவையெல்லாம் வள்ளல்பெருமானே அந்த தவறுகளுக்கு இடம் கொடுத்தவராக இருந்தார் என்று சொல்வதற்கில்லை ; ஆனால் தனது சீடர்களிடம் இந்த தவறுகள் எல்லாம் இருக்கிறது என்பதற்காக ; அதை அவர்கள் உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புகோரி திருந்தி முன்னேறவேண்டும் என்பதற்காக பெருமான் அப்படி பாடியிருக்கிறார் என்பதை பலமுறை நான் எழுதியுள்ளேன்

அதுபோலவே இன்றைய சன்மார்க்கிகள் தங்களை தனி ஒரு மதம்போல வளர்க்க முயற்சித்து ; மற்ற மார்க்கங்கள் யாவும் பொய் ; குப்பையிலே போடு ; ஒதுக்கிவிடு என ஆர்வக்கோளாறு கொள்ளும் காலம் வருகிறது என்பதற்காக தன்னையும் ஒரு மாச்சர்யம் உள்ள நபராக இப்பாடலில் காட்டிக்கொண்டுள்ளார்

இப்படியிருந்த பெருமானார் ; வளர்ந்து எப்படி ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கு வந்துசேர்ந்தாரோ அப்படியே நாமும் சகல மதங்களோடும் மார்க்கங்களோடும் சமரசமாக ஆன்மநேய ஒருமைப்பாட்டை கற்றுக்கொள்வதே வள்ளல்பெருமானாருக்கு நாம் செய்யும் குருகாணிக்கை ஆகும்



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...