இதுவரை பார்த்தவர்கள்

Monday, 7 September 2020

முன்னுரை


சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்ப்பிக்க பட்டபோது வகுப்பில் நாட்டமில்லாது அடிக்கடி காணாமல் போகிறார் என்ற புகார் அண்ணன் சபாபதிக்கு செல்கிறது

ஒரு நாள் அண்ணன் ஒளிந்திருந்து கண்காணிக்கிறார் . மெதுவாக ராமலிங்கம் அங்கிருந்த கந்தர்கோட்டம் முருகன் கோவிலுக்குள் செல்கிறார்

அங்கு கருவறைக்கு அருகில் தூண் அருகில் அமர்ந்துகொண்டு முருகனை பார்ப்பதும் முணுமுணுப்பாதுமாக இருக்கிறார்

சில நிமிடங்கள் கழித்து அவரை பிடித்து அடிக்கிறார் அண்ணன் சபாபதி . இழுத்து கொண்டு சென்று முதலியாரிடம் ஒப்படைக்கிறார்

சிலநாள் கழித்து மீண்டும் பிள்ளை காணாமல் போகவும் இம்முறை பச்சயப்ப முதலியாரே கந்தர்கோட்டத்திற்குள் செல்கிறார்

அங்கு பூசாரி யாராவ்து பாடுங்களேன் என்று சொன்னதும் தன்னையறியாமல் பிள்ளை 30 கவிதைகள் பாடுகிறது . ஆசு கவி என்ற மிகவும் சிக்கலான இலக்கணத்தோடு மிக நேர்த்தியாக பாடப்பட்ட கவிதைகளை கேட்டு ஆசிரியர் திக்கித்து போகிறார் .


மனித முயற்சியால் இப்படி பாட முடியாது என உணர்ந்த ஆசிரியர் பிள்ளையிடம் தாள குணிந்து அப்பா உனக்கு இலக்கணம் கற்பிக்கும் அளவு தகுதி எனக்கில்லை என்கிறார்


இதே போலவே அண்ணனிடமும் தெரிவிக்க அவர்கள் முடிவு எடுக்க முடியாமல் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள்


எங்காவது போ என்னவாவது செய் என விடப்பட்டவர் பல நாளாளவும் காணாமல் போவதும் வருவதுமாக ஆகி விட்டது .


இதன் பின்னணி யாதென்றால் முருகனே தணிகைமணி பிரான் என்பவராக வள்ளலாருக்கு மட்டுமே தெரிகிற நபராக வந்து அவரை அழைத்து செல்வதும் பயிற்சி கொடுப்பதுமாக நடந்திருக்கிறது

கந்தர் கோட்ட மணிமாலை பாடல்களே அவரது முதல் பாடல் என பலர் சொன்ன போது திருத்தணி முருகன் முருகன் முன்பு பாடியபாடலே முதல் பாடல் என்றார் வள்ளலார்

திருத்தணிக்கு 9 வயதுக்கு முன்பு யாரும் அவரை அழைத்து செல்லாத போது ; இது எப்படி சாத்தியம் ?

தணிகைமணி பிரானே சூட்சுமமாக அவரை அழைத்து சென்றவர்

வள்ளல்பிரான் தணிகைமணிபிரானால் வழிநடத்தப்பட்டவர்

ஆவிமண்டல குருநாதர்களால் வழிநடத்தப்படுபவர்களால் மட்டுமே உலகத்திற்கு மேன்மைகளை
கொண்டு வர முடியும்

ஆகவேதான் ஞான நிலையில் நின்று கந்தர் கோட்ட மணிமாலையை வெளிக்கொணர முடிந்திருக்கிறது

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 1






9 வயது குழந்தையை பூசாரி ஏதாவது பாடு என சொன்னதால் பாட முயற்சிக்கிறது

அதுவோ உய்கின்ற நாள் எந்த நாள்

உய்கின்ற நாள் எந்த நாள் என புலம்புகிறது

வெறும் புலம்பல் மட்டும்தானா என்றால் தன் முற்பிறவியின் ஞான அனுபவத்தை பிழிந்து வழியும் சொல்கிறது

புண்ணியம் செய் நன்மை செய் என்கிறார்களே பாவதோசம் உள்ள மனிதன் நல்லது செய்ய நினைத்தாலும் கெடுதலாகவே முடியும்

ஒருவன் நன்மை செய்யவேண்டுமானால் அவனிடம் இறைவனின் பெரருள் நிறையவேண்டும்

டயருக்கு காற்று அடித்து அடித்து ஓட்டுவதுபோல அனுதினமும் இறைவனிடம் தோடர்பு கொண்டு இறையருளை ஏதாவது ஒரு வழியில் நாம் சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும்

நித்திய அனுஸ்ட்டானம் இல்லாவிட்டால் உலகமும் அதன் இருளும் அசுரர்களும் நம்மை நிரப்பி மேற்கொள்வார்கள்

திரு ஓங்கினால் புண்ணிய செயல்கள் ஓங்கும்

அப்போது பக்தர்களின் திறன் ஓங்கும்

ஆனால் பக்தர்களின் நிலைமை என்ன

எப்போது பார்த்தாலும் ஏக்க பெருமூச்சுதானே

யாரையாவது கும்பிடுவதற்கு ரெடி நீதான் தண்டி என செம்படிக்க ரெடி

எனக்கு எல்லாம் செய்துகொடுங்கள்

மதத்தை பரப்ப ரெடி

ஆனால் உபதேசத்தை கற்றுக்கொள் உன்னை உயர்த்திக்கொள் என்றால் ஊகூம் ஊகூம்

மதச்சண்டை போட ரெடி

அடுத்தமத தேவர்களை காரிதுப்ப ரெடி

நாலுபேர்களின் மண்டையை உடைக்கவும் ரெடி

உன் தகுதியை இறைநிலைக்கு உயர்த்திக்கொள்

உன் மதகுருமார்களின் உபதேசங்களிலாவது தெளிந்து தேறு என்றால் ஊகூம் ஊகூம்

நாங்கள் கும்பிடுகிறோம் அவர் எங்களை பார்க்கட்டும் என்கிறார்கள்

யாரிடமும் உபதேசத்தை கற்றுக்கொண்டு அதன்வழி நடந்தால் அறிவு ஓங்கும்

பட்டறிவு செறிய செறிய ஞானசெல்வம் ஓங்கும்

உலகிலும் அருளிலும் நிறைவான இன்பம் ஓங்கும்

நித்திய பரமானந்தம்

களைகள் ஓங்கி சகதி மண்டிய குளத்தில்தான் செங்கமலம் மலரும்படியும் வனங்கள் ஓங்கி வளரும்படியும் இறைவன் அருள்செய்கிறார்

நாளும் நம்மை அரவணைத்து வளர்க்கிற கருணை நம் குற்றம் குறைகளை கண்டு வெறுப்பதில்லை

அவரோடு மயில் ஊர்வதுபோல இசைந்து வளர்ந்தால் வரம் கிடைக்கும்

அமுது கிடைக்கும்

ஞானம் வளர வளர நமது உணர்வில் இறையொளி வளரும்

ஆத்ம உள்ளொளி வளரும்

சிவன் வைரவனாக மாறிய வைரவன்பட்டியில் லிங்கத்தின் பெயர் வளர்ஒளி நாதர்

ஆத்ம உள்ளொளி வளர்ந்து வைரம் விளைவதே ஒளிதேகம்

அப்போது எவ்வுயிர் மீதும் தயவு கருணை உண்டாகி இறைவனின் பதம் அனுபூதி அருள் வளம் சித்திக்கும்

உய்கின்ற வழி

மதவைராக்கியத்தால் வருவதல்ல

மந்திர உச்சாடணத்தால் வருவதல்ல

ஆத்மாவில் இறையொளி ஓங்கட்டும்

உய்கின்ற நாள் அந்த நாள்
உய்கின்ற நாள் அந்த நாள்




Kanthar Kotta Manimalai 2






பரம் விண்ணுலகம் என்று ஏதேனும் இருக்கிறதா ?

சும்மா அதெல்லாம் கப்சா

இப்ப இருக்கும்போதே அனுபவிச்சு வாழாம எப்பயோ போகப்போற பரலோகத்துக்காக வாழனுமாம்

பாவபுண்ணியம் பார்க்கணுமாம்

செய்யிற செயலுக்கு விணை வந்து சேருமாம்

இன்னொரு பிறவியில வருமாம்

பிள்ளைகுட்டிகளுக்கு வருமாம்

நாம செய்யிறதா நாலுபேருக்கு தெரியாம செய்தா யாருக்கு தெரியும்

திறமையா இருக்கணும் தெரியுமா

போக்கத்த பயலுவ சும்மா சாமி பூதம்னு பேசிட்டு திரியுதுங்க

பெரியார் னு ஒரு சாமி நமக்கு சொல்லிரிச்சுள்ள ஆரிய பார்ப்பன சதின்னு

பகுத்தறிவுன்னு

நாலு காச பாப்பம்

ஜாலியா அனுபவிப்போம்

பக்தியாம் பக்தி

முக்தியாம் அருளாம்

விரதமாம் தவமாம் வரம் வாங்குவாங்களாம்

பசு பதி பாசம் னு சித்தாந்த விளக்கம் சொல்றாங்களாம்

பொழைக்கத்தெரியாத பசங்க பேசிட்டுத்திரியிதுங்க

மனசுக்கு பிடிக்கிற மாதிரி விதவிதமா சாப்பிடனும்

அதுவும் நாலுபேர் சேர்ந்து பெருமை பேசிகிட்டே விருந்து கொண்டாடனும்

நல்ல டிரெஸ் போட்டுக்கிடணும்

மனம் கவரும் பெண்கள் உடன் பேசிமகிழனும்

முடிஞ்சா நறுமண மலர்களை அவர்களுக்கு சூட்டி கொஞ்சனும்

கற்பு நெறி கடைபிடிக்காத பெண்களோடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம்

கைகண்ட பலன்

பூமியில் வாழ்ந்ததற்கு அர்த்தம்

என்ற கொள்கையுள்ள கயவர்களோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை வராமல் இறைவா பார்த்துக்கொள்ளுங்கள்

சேர்க்கை தோஷம் நம்மை பாதித்து விடும்

ஆகவேதான் சத்சங்கம் என்ற ஒரு தொடர்பை இருக்கிற இடத்திலே ஏதாவது ஒரு வகையில் வைத்துகொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னார்கள்

உலகத்தில் கெட்டசங்கம் அரட்டை ஆங்காங்கே இல்லாமல் இருக்காது

அது எவ்வளவு இருந்தாலும் தினந்தோறும் ஒரு கோயிலில் போய் அமர்ந்து கொஞ்ச நேரம் தியானித்து பிரார்த்தித்தால் கெட்டதை நல்லது கழுவி விட்டு விடும்




Kanthar Kotta Manimalai 3






இது ஆசு கவி என்னும் சிக்கலான இலக்கண அமைப்பு

இருந்தாலும் பாட ஆரம்பித்து விட்டார் 9 வயது வள்ளலார்

இந்த பிறவியில் அவர் துறவி போல வாழப்போகிறவர்

ஆனாலும் முற்பிறவி அனுபவம் நிறைய இருக்கும் போல

சித்தினி என்கிற உடல்வாகு அமைப்புள்ள பெண்கள் துறுதுறுவென ரசனைக்கு உரியவர்கள்

ஒரு இடத்தில் கால் நிற்காது பாவிக்கொண்டே இருக்கும் . உடல் அசைவுகளும் அடவுகளும் முகபாவனைகளும் நாட்டிய கலைபோல சாதாரணமாகவே இருப்பார்கள்

எனக்கு திருமணமான புதிதில் என் மனைவி அழைச்சுகுட்டை என ஒருவரைப்பற்றி அவ்வப்போது கமண்டுவதை கேட்டிருக்கிறேன்

அப்புறம் ஒருநாள் அதுயார் என கேட்டபோது சொன்னார்கள்

அது சித்தினி உடல்வாகு அமைப்புள்ள ஒருபெண் என்பதையும் அவர்கள் அறியாமலேயே நாட்டியம் ஆடி அடுத்தவரை கவருவதால் என் மனைவி அழைச்சுகுட்டை என்கிற டெக்னிகல் வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்தேன்

இன்றைய அம்மன் படங்கள் சிலைகள் பல இந்த சித்தினி உடல்வாகுவிலேயே இருக்கும்

வள்ளல்பெருமானும் மனிதர்களின் இதயத்தை கவரும் இந்த வடிவமைப்புள்ள பெண் ஒருவரையே இங்கு வர்ணிக்க ஆரம்பிக்கிறார்

ஒரு தேர்ந்த கவிஞன் கவிதை வடிக்கும்போது நேர்த்தி காட்டுவது அவன் கடமை என்பதால் வர்ணனையை கலைஞனின் கண் கொண்டு நாமும் பார்க்க வேண்டும்

சுறு சுறுப்பாக வெட்டி கொண்டிருக்கும் துடுப்பு போன்ற இடை
அன்னம் தத்தி தத்தி பூமியை பிடிப்பதுபோன்ரற நடை
மேகம் கூட்டம் ஒன்று மேல் ஒன்று கவிழ்ந்திருப்பதுபோலவும் விரிந்தும் படர்ந்தும் கோட்டை மதில் போன்ற கூந்தல்
கண்ணாமூச்சி ஆடும் மார்பு
செழுமையான இடுப்பு
நீர்ச்சுழி போன்ற உந்தி
வடிப்பான முழி
பெளர்ணமி போன்ற பளிச்சென்ற முகம்

ஆகியவற்றில் மயங்கி மங்கையர்களின் பிம்பத்தை சுமந்து
அங்கத்தை அளவெடுத்துக்கொண்டே இருக்குமாம் மனம் என்கிற பாவி
அது மாண்டால் மட்டுமே நான் வாழமுடியும்

மங்கையர்களின் பிம்பத்தை சுமந்து
அங்கத்தை அளவெடுத்துக்கொண்டே இருக்கும் மனம் என்கிற பாவி மாளட்டும் நான் வாழட்டும் என்கிறார் வள்ளலார்

பெண்கள் திரிபுரசுந்தரி ஆகிய அன்னையின் பல்வகை அம்சங்கள்

அவர்கள் அழகாக இருப்பது ஆர்களது இயல்பு

பிரச்சினை அவர்களின் அழகில் இல்லை

அந்த அழகியலை ஆண்களின் மனம் பிம்பமாக இதயத்தில் சுமந்து அதை அளவெடுத்துக்கொண்டே இருக்கிறதே அதில்தான் பிரச்சினை இருக்கிறது

பார்க்கிற பெண்களை எல்லாம் அவர்கள் கடந்துபோன பின்பும் இதயத்தில் சுமந்துகொண்டு திரிவதில்தான் பிரச்சினை இருக்கிறது

பெண்களை சுமக்காத மனம் ஆண்கள் அடைய வேண்டிய ஒரு முக்தி

ஒரு படி

பெண்ணாசையை கடந்த முக்தி நிலை இது

ஒழுங்கை கடைபிடி என்பது சரி என்றாலும் வம்பாக ஒழுங்கை கடைபிடிப்பது வளர்ச்சியே அல்ல

பெண்களால் பாதிக்கப்படாத நிலையை நீ அடையவேண்டும் என முருகன் வள்ளலாரிடம் சொன்னாராம்

பெண்களால் பாதிக்கப்படாத படிநிலையை அடையாது ஆசையை அடக்கு என்ற நிலையிலேயே நீ இருப்பதால் முன்னேற்றம் இல்லை என்பதை நீ உணராதிருப்பது என்ன என முருகன் வள்ளலாரிடம் கேட்டாராம்




Kanthar Kotta Manimalai 4






வள்ளல் பெருமான் சிவனால் திருவடி தீட்சை வழங்கப்பெற்ற பிறகு சிவ வழிபாட்டில் இருந்து அருட்பெருஞ்சோதி வழிபாட்டுக்கு மாறினார்

அந்த அருட்பெருஞ்சோதி இசுலாத்தில் சொல்லப்படும் அருவ இறைவன் என்பதும் அல்லா என்பதும் வள்ளலாருக்கு நன்கு தெரியும்

ஆனாலும் மதச்சாயம் உண்டாகி கேடுகள் விளையும் என்பதால் அருட்பெருஞ்சோதி என அடையாளப்படுத்தினார்

இசுலாத்தின் மந்திரமான கலிமாவை கொஞ்சம் மாற்றி சன்மார்க்க மந்திரமாக கொடுத்தார்

அவன் அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் என்பது இசுலாத்தின் மந்திரம்

அளவற்ற அருளாளன் என்பதை அருட்பெருஞ்சோதி என்றார்
நிகரற்ற அன்புடையோன் என்பதை தனிப்பெருங்கருணை என்றார்

வள்ளலாரின் இன்னொரு அம்சமான சாலை ஆண்டவரும் பிரணவமே அருட்கலிமாவாகும் என உறுதிபடுத்தியுள்ளார்

அல்லா என்ற அரபு வார்த்தைக்கு அர்த்தம் கடவுள் இறைவன் என்ற பொது அர்த்தமாகும்

அருவ ஏக இறைவனை வழிபடுவது என்ற உண்மையைத்தவிர மற்ற அராபிய கலாச்சார பண்பாடுகளை இசுலாம் மதம் என்பதாக உள்ளது

அதில் அராபிய தன்மையை ஒதுக்கிவைத்துவிட்டு இந்துக்களாக இருந்துகொண்டே அருவ இறைவனை வணங்கலாம் என்பதை இந்திய இசுலாமியர் உணரவேண்டும்

அராபிய அடையாளங்கள் உங்களை அந்நியப்படுத்துகிறது

இந்திய உறவிணர்களைவிட்டு ஏன் ஒதுங்கவேண்டும்

இறைவன் முக்கியமே தவிர அராபிய அடையாளம் அவசியமற்றது

ஏக அருவ இறைவனை வணங்க சரியான மார்க்கம் வள்ளலாரின் சன்மார்க்கமாகும்

9 வயதில் கந்தர்கோட்ட முருகன் கோவிலில் வள்ளலார் நின்றுகொண்டிருக்கும் போது அலங்காரம் செய்யும்வரை யாராவது பாடுங்களேன் என பூசாரி கேட்டதால் 31 பாடல்கள் தன்னையறியாமல் பாடினார்

அருளால் பாடிய இப்பாடல்களில் முந்திய பிறவி ஞானம் உண்மை வெளிப்பட்டுள்ளது

அருவ ஏக இறைவனை வழிபடுவதன்றி அவரது தேவர்களை மட்டும் வழிபடு மதி என்றால் கனவில் கூட மதிக்கமாட்டேன்

அந்த தேவர்கள் ஏன் கண்ணெதிரே வந்து நன்மைகள் பல கொடுக்கிறேன் என்றாலும் அவர்களை மட்டும் மதித்து விட்டு உருவம் அற்ற இறைவனை வழிபடாமல் இரு என்றால் இருக்கமாட்டேன்




Kanthar Kotta Manimalai 5






ஞான சற்குரு முருகன் வள்ளலாருக்கு தெளிந்த உணர்வை கொடுத்தாராம் . என்ன தெளிவு ?

வள்ளல்பிரான் சைவமார்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர் . குடும்ப சூழலில் அந்த சித்தாந்தம் அவருக்கு தெரிந்திருக்கும் .

நல்ல குரு ஏற்கனவே வளர்ந்ததை அழித்து விடு ; மார்க்கம் மாறிவிடு ; இனம் மாறி வேறொரு இனத்தினரின் பெயரை வைத்துக்கொள் ; உன் தாத்தன் பூட்டன் பெயரை மறந்து விட்டு யாரென்றே தெரியாத ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு இஸ்மாயில் என யூதர்களின் அரபியர்களின் பெயரை தாத்தன் பூட்டனாக சொல்லு என்றெல்லாம் சொல்லமாட்டார்

இருக்கிற இடத்திலிருந்தே கடவுளை நோக்கி பாதை காட்டி அருளுவார்

சைவமரபிலே பசு பதி பாசம் என்பதை சொல்லித்தந்திருப்பார்கள்

பசுவாகிய மனிதர்களை மனித ஆத்மாக்களை பாசம் என்னும் பிறவிக்கடலில் இருந்து ரட்சித்து கடவுளை காட்டியருளும் குருவாக சிவனை பதியாக பற்றிக்கொள்

உலக பாசத்திலிருந்து சிவகுருவின் மீது பாசத்தை வளர்த்துக்கொண்டால் பாசம் என்னும் பந்தத்திலிருந்து விடுபடுவாய் என்பார்கள்

வள்ளல்பிரானிடம் சிவகுருவாக வந்த முருகன் ; நிலைக்கண்ணாடியில் தன்னை காட்டியருளிய முருகன் பசு பதி பாசத்திலிருந்தே உபதேசத்தை தொடங்கினாராம்

பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசு சுத்த பாவனை ஆகும் கரணம் ஈங்கமாகும்

பதியாகிய சிவபூஜை செய்வதால் மனம் என்னும் பசு சுத்தமாகும் . மனதோடு சேர்ந்து இயங்கும் மனதை கெடுக்கும் ஐம்புலன்கள் ஈங்கமாகும் .

ஞானிகள் பேசுகிற பாஷையால் தமிழ் விளங்கும் . தங்கம் வலிவு இல்லாதது . நகையாக அணியமுடியாது . நகை செய்யவேண்டுமானால் அதில் செம்பை அளவோடு கலக்கவேண்டும் . அப்படி கலந்த தங்கத்தை தங்கநகை ஆபரணம் என்கிறோம் . ஆனால் ஆபரணத்தை ஈங்கம் என்கிறார் வள்ளலார்

தங்கம் செம்பு கலந்தால் ஈங்கம் . இந்த ஈங்கம் வலிமை பெற்று ஆபரணமாக மகிமை அடைகிறது . அதுபோல மனமது செம்மையாகும் போது சுத்த பாவனையும் உடலும் பொன்னைப்போல பிரகாசமடைகிறது . பொழிவடைகிறது

ஆனால் ஆனால் பதியானவரோ அந்த சுத்த பாவனையையும் கடந்தவர் .

மனிதன் முதலில் சுத்த பாவனை அடையவேண்டும் . பிறகோ அந்த பாவனையையும் கடந்து விடவேண்டும்

தீமையிலிருந்து நன்மைக்கு மாறவேண்டும் பிறகோ நன்மை தீமை என்பதையும் கடந்துவிடவேண்டும் இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் . நன்மையையும் கூட ஒரு இருளே .

இறைதூதர்களோ அவதாரங்களோ தீய இயல்புள்ளவர்களை வெறுத்ததோ விலகி நின்றதோ இல்லை . அவர்களிலிருந்து தங்களை மேம்பட்டவர்களாக வித்தியாசப்படுத்தியும் காண்பித்ததில்லை

என்னை பாவிகளின் தோழன் என்கிறார்கள் ; மனம் திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைக்காட்டிலும் மனம் திருந்துகிற ஒரே ஒரு பாவியின் நிமித்தம் பரலோகம் மிகுந்த சந்தோசமடையும் என்றார் சற்குரு இயேசு . தேவ அன்பை ருசி பார்த்தவர்கள் யாரும் தீயவர்களை அருவெறுக்க மாட்டார்கள்

இறைவன் நல்லோர்க்கும் பொல்லோர்க்கும் நடு நிற்பவர்

சுத்த பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதி
சுத்தம் அந்த சுத்தத்தையும் கடந்த நிலை பரிகரித்த நிலை பரிசுத்தம்

நன்மை தீமை என உணர்ந்து நன்மையில் நின்றால் அது சுத்தம் நன்மை தீமையையும் கடந்து விட்டாலோ பரிசுத்தம் மதி பாசம் அற்று அடங்கிய நிலை

மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே

இருமையை கடந்த நிலை வரவு போக்கற்ற நிலை எதனாலும் பாதிப்பில்லாத நிலை கைகூடினால் மெய்ஞானம் விளங்கும்

அது குன்றின் மீது ஒளிரும் விளக்கை போல தனக்கும் சமூகத்திற்கும் பலனளிக்க கூடியது

மத்தேயு 5

1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.


10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
என்பது இயேசுவின் உபதேசமாகும்

முருகன் வள்ளலாருக்கு சைவ சித்தாந்தம் முதல் இயேசுவின் உபதேசம் வரை காட்டுக்கொடுத்தார் என்பதே இங்கு சுட்டப்படுகிறது

Kanthar Kotta Manimalai 6






பஞ்சமாபாதகம் என்று கேள்விப்பட்டிருப்போம் . ஆனால் வள்ளலோ ஏழு - சப்தபாதகம் என்கிறார் .

காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ; இவைகளுடன் கொலை ஆகிய ஏழு பாதகங்கள் மற்றும் இவைகளோடு கூடிய அநேக தீய இயல்புகள் எனைப்பற்றிடாமல் சற்குரு முருகன் காத்துக்கொள்ளவேண்டுமாம் .

காமம் நமது உள் பகைவன் . கூடவே இருந்து அவ்வப்போது தலைகாட்டி கழுத்தை அறுப்பவன்

கோபமோ வெங்கொடியவன் . சட்டென்று கோபம் வந்து ஆட்டம் ஆடிவிடுவோம் . பிறகுபார்த்தால் நாம் கோபப்பட்டது தவறு என தெரியும்

பேராசை அளவுக்கதிகமாக அவதிப்படுவது - முழு மூடத்தனம்

இறைவன் போதிய அளவு கையைத்திறப்பார் . இல்லை எனது கொடுப்பார் . நம்மை இயலாமையில் இல்லாமையில் தவிக்க விடமாட்டார் என பலமுறை உணர்ந்தாலும் காசு விசயத்தில் கவலை சேர்த்துவைக்கவில்லையோ என நினைப்பது ; சுபசெலவு செய்ய தயங்குவது .

வீணான மோகம் . இனக்கவர்ச்சி என்பது ஒரு சாபம் . நம் ஆத்மா ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ இல்லை

சரீரத்திலோ நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாகவும் மாறி மாறித்தான் பிறந்தும் வருகிறோம்

ஆண் பெண் பேதம் கடரப்படவேண்டியதே தவிர மறு பாலினத்தை எவ்வளவுதான் ரசித்தாலும் ருசித்தாலும் ஒன்றையும் அடையப்போவதில்லை . திருப்தி அடையப்போவதில்லை

மோகம் வீணானது

மதவெறி கண்கெட்ட ஆங்காரம்

உலகம் முழுவதும் உள்ள பலவகை இனங்களும் இறைவனால் படைக்கப்பட்டவையே

உலகம் முழுவதும் இன்று வளர்ந்துள்ள பலவகை இறைநெறிகளும் மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவனிடமிருந்து வந்தவையே என்ற பொதுப்பார்வை கண்கேட்டுப்போனதால் மதவெறி வருகிறது .

நம் மதத்தை வளர்க்கலாமே தவிர அடுத்த மதத்தை துவேசிக்க கூடாது. நம் மத தேவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடி அடுத்த மத தேவர்களை காறித்துப்பினால் நம் மத தேவர்களும் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்

ஏனெனில் தேவர்களுக்குள் பிரிவினை இல்லை

இறைவன் ஏகர் . இறை பேரரசில் உள்ள பலவகையான தேவர்களும் ஒருவர்க்கு ஒருவர் ஒற்றுமையாக ஏகமாகத்தான் உள்ளனர்

பரஸ்பர அன்பு , நல்லிணக்கம் தேவ குணங்களில் ஒன்று
வெறுப்பு பேதம் என்பது அசுர குணம்

ஏகத்தை ; நல்லிணக்கத்தை மறுக்கும் மாச்சர்யம் விழலுக்கு இறைக்கும் நீர் போன்றது

ஜீவகாருண்யம் ; இறக்கம் ; அன்பு என்பதை மிருகங்களை கொல்லாமல் இருப்பது ; சைவ உணவு மட்டும் சாப்பிடுவது என்பதாக மேலோட்டமாக கருதிக்கொள்கிறோம்

எந்த உணவு என்பது சடங்கு . அடையாளம் மட்டுமே

ஆனால் உள்ளார்ந்து இருக்கும் விஷயம் கொல்லாமை

விலங்குகளை கொல்லாமை புலால் உண்ணாமையை விட முக்கியத்துவமான விஷயம் மனிதர்களை கொல்லாமை

மனிதர்களை அவமதிப்பதே இறைவனுக்கு விரோதமான பெரும் பாவம்

மனிதன் ஒருவனே இறைவனின் சாயலில் உள்ளவன்

மனிதனை அவமதித்தால் அவனின் சாயலில் உள்ள இறைவனையும் அவமதிக்கிறோம்

தூய இறைபக்தி இறைவனின் சாயலில் உள்ள மனிதர்களை எக்காரணம் கொண்டும் அவமதிக்காது

மதங்களின் காரணமாக அடுத்த மதத்தினரை கொல்லலாம் ; சுவர்க்கம் கிடைக்கும் ; தர்மயுத்தம் என்பதெல்லாம் இறைவனை உணராத சீடர்கள் விளக்கம் கொடுத்தது

எந்த இறை தூதரும் ; ஞானியும் அடுத்த மதத்தினரை கொன்றால் புண்ணியம் என்று சொல்லவே இல்லை . அப்படிப்பட்டவர்களை வள்ளலால் பெருமான் பாதகன் என்கிறார்

வேறுவேறு தேசத்தில் வந்ததால் மதங்கள் வேற்றுமை உள்ளவையாக உள்ளன

ஆனால் மதங்களின் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமையை உண்டாக்கும் சமரச வேதமும் சமரச வேதாந்தியும் இறைவன் புறத்திலிருந்து வந்த பிறகே கலியுகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்

சத்திய யுகமும் இறைபேரரசும் வரப்போவதை உணர்ந்த இறைபற்றாளர்கள் தங்கள் மதத்தை அழியவிடாமல் காப்பார்களே தவிர மற்ற மதங்களை வெறுக்கமாட்டார்கள்

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே

சேமத்தை அளிக்கும் மா மறைகள் பல உலகம் முழுதும் பகுதி பகுதியாக ஆங்காங்கு வெளியாக்கப்பட்டுள்ளன .வேற்றுமை போல தெரியும் அவை ஏமத்தை ஏக இறை நெறியை மறைமுகமாக . அவைகளின் ஊடாக போதிக்கின்றன . ஏகத்தின் அருட்பதமே ஓம் .

அந்தோ அந்த ஓம் ன் அர்த்தத்தை சிவன் முதலான அனைத்து தேவர்களும் மனிதர்களும் மறந்தல்லவோ போனார்கள் . மலை முனிவன் சிவனுக்கு முருகனல்லோ ஓம் என்ற பதத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்

இன்றைய மனிதர்களும் ஓம் என்பதன் அர்த்தம் அறியாமல் ஏதோதோ பிதற்றுவார் . அல்லது சிவனுக்கு முருகன் உபதேசித்து விட்டார் என்பதை தெரிந்திருப்பதையே ஓம் க்கு அர்த்தம் அறிந்ததுபோல நம்பிக்கொள்வார் .

ஓம் என்ற பதத்தின் அர்த்தம் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதாம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்பதாம்

வானமண்டலத்திலும் பால்வெளியிலும் அனைத்து தேவர்களும் படைப்புகளும் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்று மனதாலும் உணர்வாலும் துதிக்கும் சத்தமே பிரணவ மந்திரமாக சுற்றி சுழன்று வருகிறது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயண்யாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...