இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 9





தேவைகள் உலக வாழ்வுக்கான தேவைகள் மிக குறைந்த பட்ச தேவைகள் நிறைவேறப்படாமல் இப்பூமியில் வாழமுடியாது

உணவு உடை இருப்பிடம் இம்மூன்றாவது பூர்த்தியானால் மட்டுமே மனிதன் ஆன்ம வாழ்வில் பயணித்து சாதனைகள் செய்யமுடியும்

வள்ளலாரை படிப்பித்து ஆளாக்கும்படியாக அவரது பெற்றோர்கள் அண்ணன் சபாபதியிடம் சென்னைக்கு அனுப்ப அவரை ப்ராட்வேயில் வாழ்ந்த பச்சையப்ப முதலியாரிடம் தமிழ் இலக்கணம் கற்கச் சேர்க்கப் பட்டார்.அப்போது அவருக்கு ஒன்பது வயது. இடைவெளியில் அடிக்கடி அவர் காணாமல் போவிடுவார்.நண்பர்கள் அவரைத் தேடிக் கொணர்வது வழக்கம். இந்தச் செயல்பற்றி அவரது அண்ணன் சபாபதிக்குச் செய்தி சொல்லப்பட்டது. ஒரு நாள் அண்ணன் மறைவில் இருந்து தம்பியைக் கண்காணித்தார்.

இடைவெளியில் இராமலிங்கம் விடுவிடு என பூங்கா பகுதியில் உள்ள கந்தர் கோட்டத்துக்குள் செல்கிறார். முன்னூறு வருடங்கள் பழமைமிக்க முருகன் ஸ்தலம் கந்தர் கோட்டம்! கோயிலுக்குள் சென்று நேரே முருகன் முன் தூண் ஓரம் நிற்பதும், வாயால் ஏதோ முனுமுனுப்பதுமாக இருக்கிறார், பின் வந்து விடுகிறார்.அன்று மாலை இராமலிங்கத்துக்கு அடியோ அடி!

மறுநாளும் இதே போல் கந்தர்கோட்டம் போய் விட்டார், இப்போது பச்சையப்ப முதலியாரே அவர் பின் சென்று கவனிக்க, யாரோ அபிஷேகக் கட்டளைக்கு தந்திருக்கும் வேளையில், அர்ச்சகர் ”யாராவது பாடுங்களேன்” என்று மூலஸ்தானத்தில் இருந்து ஒரல் எழுப்ப, ஒன்பது வயது இராமலிங்கம் அப்போது ஆசுகவியாய் தமிழ்த்தெய்வத்தின் கருணையால் வாய்மலர்ந்தது தான் கந்தர்கோட்ட தெய்வமணி மாலையின் முதல் மணி . திருவோங்கு எனத்தொடங்கும் பாடல் .

ஆசுகவி என்பது மிக சிக்கலான இலக்கண அமைப்பு கொண்டது . கற்றறிந்த பண்டிதர்களுக்கே உரிய நேர்த்தியோடு அக்கவி வெளிப்படவும் பச்சையப்ப முதலியார் கற்பிப்பதற்கு அப்பாற்பட்ட தெய்வப்பேறு உள்ள குழந்தை இது என்பதை புரிந்துகொண்டார் . சபாபதியிடம் இதை புரியவைக்க முயற்சித்தார் . இந்த குழந்தைக்கு கல்வி கற்பிக்கும் தகுதி தனக்கில்லை என கூறிவிட்டார்

இதன் தாத்பர்யம் என்னவென்று புரியாமல் தன் கை மீறிய தம்பியை பற்றி கவலைப்படுவதால் பலனில்லை என்பதாக ஒரு முடிவெடுத்து எக்கேடும் கேட்டுப்போ என்கிற அளவில் வள்ளலாரை கண்டு கொள்ளாமல் இருக்கத்தொடங்கி விட்டார் சபாபதி

பள்ளியும் போகாமல் காலையில் வெளியே போவதும் இரவு வந்து தூங்க வருவதுமான வள்ளலார் எப்போது வருவார் என தெரியாமல் அவரை உண்பிப்பதுபற்றியும் கடந்த நிலை உருவாகிவிட்டது

மின்ட் என சொல்லப்படும் தங்கசாலை பகுதியில் வள்ளலார் அண்ணன் வாழ்ந்த ஒதுக்குப்புறமான அந்த வீட்டுக்கு சென்றிருக்கிறேன்

நல்லவேளையாக அவ்வீடு நான்கு பேர் கைமாறி இப்போது ஆன்மீக உணர்வுள்ள ஒருவரின் கைக்கு வந்ததால் அந்த மாடி போர்ஷனை அப்படியே ஒரு கோவில் போல மாற்றி வைத்திருக்கிறார்கள்

அந்த இல்லம் ஒரு திண்ணைக்கு அடுத்து வாசலும் அதனுள் இரண்டு மூன்று ஒட்டு குடித்தனமும் உள் படியில் ஏறிப்போனால் மாடியில் சிறு வீடும் உள்ளது

இரவு நேரமானதும் வாசலை மூடி படுத்து விடுவார்கள் . பிந்திய இரவு வரும் வள்ளலார் திண்ணையில் படுத்து விடுவார் .

சாப்பாடு வேண்டும் என்று யாரிடம் கேட்க முடியும் பசி தர்ம சங்கடமான நிலைமை வள்ளலார் அனுபவித்ததுதான்

இதற்கு முன்பே நிலைக்கண்ணாடியில் தலை வார போனால் தனக்கு பதிலாக முருகனின் அருட்காட்சி காண ஆரம்பித்து அந்த சற்குருவே அவரை ரகசியமாக நடத்திக்கொண்டிருந்தார் என்பது யாரும் அறியாதது

உலகறிய வள்ளலார் பாடிய முதல் பாடல் திருவோங்கு என்ற தெய்வமணிமாலை பாடல் என்றால் வள்ளலார் முதல்முதல் பாடியது திருத்தணி முருகனைக்கண்டு பாடியது என அவரே பின்னாளில் தெரிவித்துள்ளார் . அப்படியானால் அந்த சிறுவனை யார் திருத்தணி அழைத்து சென்றது என்றால் சாட்சாத சற்குரு முருகனே அவரை அழைத்து சென்று கொண்டிருந்தார்

அவர் வீட்டுக்கு நள்ளிரவு வந்தாலும் வாயில் கதவை திறந்து அண்ணியின் ரூபத்தில் ஒற்றியூர் வடிவாம்பிகையே வந்து உணவளிப்பார்

சற்குருநாதர்கள் நால்வரில் ஒருவர் தரிசனம் கிடைத்துவிட்டால்போதும் மற்றவர்களும் அழைக்காமலேயே உதவிக்கு வருவார்கள் அவர்களுக்குள் எந்த பிரிவினையும் உயர்வு தாழ்வும் கிடையாது

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள்
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும் தந்து

அதிதேவர் யாராவது ஒருவரின் தரிசனம் கிடைக்கப்பெற்றால் மட்டுமே ஈ என்று இறக்காத நிலைமை உண்டாகும்

ஆனால் ஈ ஈ என்று கோவில் குளம் என்று எங்கும் ஏங்கி அலையும் சாதாரண மனிதர்களை காணும் போது வள்ளலாரின் மனம் பதைக்கிறது அவர்களுக்கு இல்லை என சொல்லாமல் ஈயும் திறம் வேண்டும் என ஏங்குகிறார்

அந்த ஏக்கம் உறு பசி தீர்த்தால் அந்த மனிதனை இறைவனை நோக்கி திறுப்பமுடியுமே என்ற ஏக்கமே அவரால் அணையாத அடுப்பு ஒன்றை வடலூரில் ஏற்ற முடிந்தது

அடுத்து மிகமிக முக்கியமான உபதேசம் எதற்காகவும் யாரையும் குறை சொல்லாதே திட்டாதே வெறுக்காதே என்ற அஹிம்சை கொள்கை . ஒரு தவறுக்கு மனிதன் மட்டும் பொறுப்பே இல்லை ; பின்னணியில் அசுர ஆவிகள் மனிதனின் சிந்தனையை கெடுக்கின்றன என்பதால் அவனை சகித்து அவன் திருந்தும்படியாக பிரார்த்தனை செய்து அவனை திருத்தவேண்டும் , கோபம் கொள்ளலாகாது

சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திறம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
ஆம் இறைவனும் அவரது அடுத்த வெளிப்பாடுகளான நான்கு அதிதேவர்களுமே அவர்களது திருவடிக்கு நம்மை ஆளாக்கி திறமும் வாய்மையும் தூய்மையும் தரமுடியும்

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது பேரருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...