இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 1






9 வயது குழந்தையை பூசாரி ஏதாவது பாடு என சொன்னதால் பாட முயற்சிக்கிறது

அதுவோ உய்கின்ற நாள் எந்த நாள்

உய்கின்ற நாள் எந்த நாள் என புலம்புகிறது

வெறும் புலம்பல் மட்டும்தானா என்றால் தன் முற்பிறவியின் ஞான அனுபவத்தை பிழிந்து வழியும் சொல்கிறது

புண்ணியம் செய் நன்மை செய் என்கிறார்களே பாவதோசம் உள்ள மனிதன் நல்லது செய்ய நினைத்தாலும் கெடுதலாகவே முடியும்

ஒருவன் நன்மை செய்யவேண்டுமானால் அவனிடம் இறைவனின் பெரருள் நிறையவேண்டும்

டயருக்கு காற்று அடித்து அடித்து ஓட்டுவதுபோல அனுதினமும் இறைவனிடம் தோடர்பு கொண்டு இறையருளை ஏதாவது ஒரு வழியில் நாம் சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும்

நித்திய அனுஸ்ட்டானம் இல்லாவிட்டால் உலகமும் அதன் இருளும் அசுரர்களும் நம்மை நிரப்பி மேற்கொள்வார்கள்

திரு ஓங்கினால் புண்ணிய செயல்கள் ஓங்கும்

அப்போது பக்தர்களின் திறன் ஓங்கும்

ஆனால் பக்தர்களின் நிலைமை என்ன

எப்போது பார்த்தாலும் ஏக்க பெருமூச்சுதானே

யாரையாவது கும்பிடுவதற்கு ரெடி நீதான் தண்டி என செம்படிக்க ரெடி

எனக்கு எல்லாம் செய்துகொடுங்கள்

மதத்தை பரப்ப ரெடி

ஆனால் உபதேசத்தை கற்றுக்கொள் உன்னை உயர்த்திக்கொள் என்றால் ஊகூம் ஊகூம்

மதச்சண்டை போட ரெடி

அடுத்தமத தேவர்களை காரிதுப்ப ரெடி

நாலுபேர்களின் மண்டையை உடைக்கவும் ரெடி

உன் தகுதியை இறைநிலைக்கு உயர்த்திக்கொள்

உன் மதகுருமார்களின் உபதேசங்களிலாவது தெளிந்து தேறு என்றால் ஊகூம் ஊகூம்

நாங்கள் கும்பிடுகிறோம் அவர் எங்களை பார்க்கட்டும் என்கிறார்கள்

யாரிடமும் உபதேசத்தை கற்றுக்கொண்டு அதன்வழி நடந்தால் அறிவு ஓங்கும்

பட்டறிவு செறிய செறிய ஞானசெல்வம் ஓங்கும்

உலகிலும் அருளிலும் நிறைவான இன்பம் ஓங்கும்

நித்திய பரமானந்தம்

களைகள் ஓங்கி சகதி மண்டிய குளத்தில்தான் செங்கமலம் மலரும்படியும் வனங்கள் ஓங்கி வளரும்படியும் இறைவன் அருள்செய்கிறார்

நாளும் நம்மை அரவணைத்து வளர்க்கிற கருணை நம் குற்றம் குறைகளை கண்டு வெறுப்பதில்லை

அவரோடு மயில் ஊர்வதுபோல இசைந்து வளர்ந்தால் வரம் கிடைக்கும்

அமுது கிடைக்கும்

ஞானம் வளர வளர நமது உணர்வில் இறையொளி வளரும்

ஆத்ம உள்ளொளி வளரும்

சிவன் வைரவனாக மாறிய வைரவன்பட்டியில் லிங்கத்தின் பெயர் வளர்ஒளி நாதர்

ஆத்ம உள்ளொளி வளர்ந்து வைரம் விளைவதே ஒளிதேகம்

அப்போது எவ்வுயிர் மீதும் தயவு கருணை உண்டாகி இறைவனின் பதம் அனுபூதி அருள் வளம் சித்திக்கும்

உய்கின்ற வழி

மதவைராக்கியத்தால் வருவதல்ல

மந்திர உச்சாடணத்தால் வருவதல்ல

ஆத்மாவில் இறையொளி ஓங்கட்டும்

உய்கின்ற நாள் அந்த நாள்
உய்கின்ற நாள் அந்த நாள்




1 comment:

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...